/tamil-ie/media/media_files/uploads/2018/09/New-Project-35.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த 1 வாரமாக தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
இன்றைய பெட்ரோல் டீசல் விலை:
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது.
இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.
தொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனஎர்.
இந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.82.24ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 42 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.74.77ஆகவும் உள்ளன.
இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
”சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து, 71 ரூபாயைத் தொட்டுள்ளது” என்றூ கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.