மத்தியப் பிரதேசத்தில் துர்கா சிலைகளுடன் சென்ற டிராக்டர் டிரெய்லர் குளத்தில் கவிழ்ந்தது; 11 பேர் பலி

விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகளை ஆற்றில் கரைப்பதற்காக பக்தர்களுடன் சென்ற அந்த டிராக்டர் டிரெய்லர், காண்ட்வா மாவட்டத்தில் துர்கா சிலைகளைக் கரைக்கச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகளை ஆற்றில் கரைப்பதற்காக பக்தர்களுடன் சென்ற அந்த டிராக்டர் டிரெய்லர், காண்ட்வா மாவட்டத்தில் துர்கா சிலைகளைக் கரைக்கச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

author-image
WebDesk
New Update
durga puja pti screenshot

இந்தச் சம்பவம் பண்டானா பகுதியில் நடந்தது. அங்குப் பக்தர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட துர்கா சிலைகளை ஏற்றிக் கொண்டு, டிராக்டரில் சென்றனர். Photograph: (Screenshot from PTI video)

விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகளை ஆற்றில் கரைப்பதற்காக பக்தர்கள் சென்ற டிராக்டர் டிரெய்லர் மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பக்தர்கள் உயிரிழந்தனர் என்று காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் பண்டானா பகுதியில் நடந்தது. அர்லா மற்றும் ஜாம்லி கிராமங்களைச் சேர்ந்த சுமார் 20 முதல் 25 பேர் பல்வேறு கிராமங்களில் இருந்து துர்கா சிலைகளை ஏற்றிச் சென்று கரைக்கும் சடங்குகளுக்காக டிரெய்லரில் பயணம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், டிராக்டர் டிரெய்லர் ஒரு குளத்திற்கு அருகில் உள்ள சிறிய பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, அது சமநிலை தவறி கவிழ்ந்து, அதில் இருந்தவர்களைத் தண்ணீரில் தள்ளியது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “காண்ட்வா மாவட்டத்தின் ஜாம்லி கிராமம் மற்றும் உஜ்ஜைன் அருகே உள்ள இங்கோரியா காவல் நிலையப் பகுதியில் துர்கா சிலை கரைப்பு விழாவின்போது நடந்த விபத்துக்கள் மிகவும் துயரமானவை” என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements

அவர் மேலும் கூறுகையில், “உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும், துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு வலிமை அளிக்கவும் அன்னை துர்காவை நான் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Madhya Pradesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: