மனைவியுடன் சண்டை; மதுபோதையில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயற்சி: திருச்சி நபரை மீண்ட புதுவை போலீஸ்!

மனகுழபத்திலும், தன் மனைவியோடு கோபித்துக்கொண்டும் புதுவை வந்ததாகவும், வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு கடலில் விழுந்து தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்று எண்ணி கடலில் இறங்கியதாக விசாரணையில் தெரிவித்தார்.

மனகுழபத்திலும், தன் மனைவியோடு கோபித்துக்கொண்டும் புதுவை வந்ததாகவும், வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு கடலில் விழுந்து தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்று எண்ணி கடலில் இறங்கியதாக விசாரணையில் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Puducherry news

மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு, புதுச்சேரி வந்த ஒருவர் மது அருந்திவிட்டு, ஆழ்கடலுக்கு சென்று தற்கொலை செய்து கொள்ள முயன்ற நிலையில், அவரை புதுச்சேரி பெரிய கடை போலீசார் காப்பாற்றினர் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதுகுறித்து சீனியர் சூப்பர்டா போலீஸ் கலைவாணன் கூறுகையில், இன்று (14.08.2025) மாலை சுமார் 05.00 மணியளவில் புதுவை, கடற்கரை சாலையில் காந்தி சிலை எதிரே சுதந்திரதின விழா பாதுகாப்பு சம்மந்தமாக பெரியகடை காவல் நிலைய, சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்பு தலைமை காவலர் ஸ்ரீநிவாசன் மற்றும் காவலர் அண்ணாதுரை ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கதக்க ஒரு ஆண் நபர் அதிக குடிபோதையில் கடலில் இறங்கிவிட்டதாகவும், அவர் மிக ஆழமான பகுதியை நோக்கி உள்ளே சென்றுக்கொண்டிருப்பதாகவும் சுற்றுலா பயணிகள் தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். இதில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கடலில் இறங்கி சிறப்பு தலைமை காவலர் ஸ்ரீநிவாசன் கடலின் ஆழமான பகுதிக்கு சென்று சிறப்பு உதவி ஆய்வாளர் .பாஸ்கரன் மற்றும் காவலர் அண்ணாதுரை, உதவியுடன்  நபரை தண்ணீரில் இருந்து காப்பற்றி கரைக்கு கொண்டுவந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட் விசாரணையில், அவரின் பெயர் ஜோசப்(49) த/பெ மரியதாஸ், அந்தோனியார் கோவில் வீதி, திருச்சி, தமிழ்நாடு என்று கூறினார். மேலும் அவர் மனகுழபத்திலும், தன் மனைவியோடு கோபித்துக்கொண்டும் புதுவை வந்ததாகவும், வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு கடலில் விழுந்து தற்கொலை செய்துக்கொள்ளலாம் என்று எண்ணி கடலில் இறங்கியதாக விசாரணையில் தெரிவித்தார்.

Advertisment
Advertisements

ஜோசப்-க்கு தகுந்த அறிவுரை கூறி அவர் சொந்த ஊரான திருச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.தற்கொலைக்கு முயன்ற ஜோசப்பை காப்பாற்றி அவரை நல்ல முறையில் ஊருக்கு அனுப்பிவைத்து மிக சிறப்பபான பணியை செய்த மேற்படி பெரியகடை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பாஸ்கரன், சிறப்பு தலைமை காவலர் த.ஸ்ரீநிவாசன் மற்றும் காவலர்  அண்ணாதுரை ஆகியோரை புதுவை, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (சட்டம் & ஒழுங்கு) மற்றும் காவல் கண்காணிப்பாளர் (கிழக்கு)  வெகுவாக பாராட்டினார்கள்.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி  

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: