முத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதால், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் டில்லியில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியதாவது, ஆதார் கட்டாயமில்லை என சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல். ஆதார் சட்டத்திருத்த மசோதா நடப்பு கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும். முத்தலாக் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளதால், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என அவர் கூறினார்.