திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திரிபுராவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பிப்ரவரி 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தலா 60 இடங்கள் கொண்ட மூன்று சட்டசபைகளின் பதவிக்காலம் முறையே மார்ச் 12, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முடிவடைகிறது.
கடந்த வாரம், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோர் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றனர்.
வாரியத் தேர்வுகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தைக் கருத்தில் கொண்டு மூன்று மாநிலங்களின் தேர்தல் அட்டவணை வகுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/