புற்றுநோயால் அம்மா மரணம்; விமான விபத்தில் தந்தை மரணம்: 18 நாட்களில் பெற்றோரை இழந்த சிறுமிகள்!

புற்றுநோயால் மனைவி மரணமடைந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் கணவரும் மரணமடைந்ததால், 2 பெண் குழந்தைகள் தற்போது அனாதையாகியுள்ளனர்.

புற்றுநோயால் மனைவி மரணமடைந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் கணவரும் மரணமடைந்ததால், 2 பெண் குழந்தைகள் தற்போது அனாதையாகியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Husband and Widfe

62 வயதான காஞ்சன் படோலியா, தனது மகன் அர்ஜுன் (37) பிரிட்டிஷ் குடிமகன்) வழியனுப்ப அகமதாபாத் வந்திருந்தார். அர்ஜுன், புற்றுநோயால் இறந்த தனது மனைவியின் அஸ்தியை நர்மதை நதியில் கரைப்பதற்காக குஜராத் வந்திருந்தார். அகமதாபாத்தில் இருந்து சூரத் திரும்பி வரும் வழியில், காஞ்சனை வதோதராவில் இறங்கி தங்கும்படி அவரது மருமகன் அழைத்தார். ஒரு சில நிமிடங்களுக்கு முன்புதான், அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா அகமதாபாத்-லண்டன் விமானம் விபத்துக்குள்ளானது பற்றி குடும்பத்தினர் அறிந்திருந்தனர்.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

விபத்து செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த காஞ்சன், சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு தனது இறந்த மகனின் உடலை அடையாளம் காண டிஎன்ஏ மாதிரி கொடுக்க சென்றார். அர்ஜுன் ஜூன் 12 அன்று லண்டனுக்குத் திரும்பி தனது 8 வயது மகள் ரியா மற்றும் 4 வயது மகள் கியாவுடன் சேர இருந்தார். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது. இப்போது அந்த 2 குழந்தைகளும் வெறும் 18 நாட்களில் தங்கள் தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்தனர் என்று வருத்தத்துடன் காஞ்சன் தெரிவித்தார்.

"எனது மூத்த மகன் விமான விபத்தில் இறந்ததை அறிந்து நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அவரது மனைவி பாரதி (35) மே 26 அன்று புற்றுநோயால் இறந்தார். இப்போது அவரது இரண்டு மகள்களும் அனாதையாகிவிட்டனர். தனது மனைவியின் (அஸ்தியை) இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முன், அர்ஜுன் தனது இரண்டு மகள்களையும் தனது இளைய சகோதரர் கோபாலின் வீட்டில் விட்டுச் சென்றார். அவரது மனைவியின் விருப்பம் நர்மதை நதியில் அஸ்தியை கரைக்க வேண்டும் என்பதுதான்.

Advertisment
Advertisements

இப்போது நான் அல்லது எனது இளைய மகன் அர்ஜுனின் மகள்களை கவனித்துக் கொள்வோம்,” என்று கலங்கிய கண்களுடன் காஞ்சன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். அர்ஜுனின் இளைய சகோதரர் கோபால் எட்டு வருடங்களாக திருமணமாகி லண்டனில் குடியேறியுள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நான் ஜூன் 12 அன்று அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் எனது மகனின் உடலை அடையாளம் காண டிஎன்ஏ சோதனைக்காக எனது இரத்த மாதிரிகளை வழங்கினேன்.

கோபால் வெள்ளிக்கிழமை மாலை அகமதாபாத் வந்து சேர்ந்தார். அனைத்து சடங்குகளையும் முடித்தவுடன், நாங்கள் உட்கார்ந்து இரண்டு பெண்களின் எதிர்காலம் குறித்து முடிவு செய்வோம். தேவைப்பட்டால், நான் லண்டனுக்குச் சென்று எனது இளைய மகனின் வீட்டில் தங்கி எனது பேரக்குழந்தைகளை கவனித்துக் கொள்வேன்,” என்று காஞ்சன் கூறினார்.

படோலியா குடும்பத்தினர் அமரேலி மாவட்டத்தில் உள்ள வாடியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே சூரத்துக்கு குடிபெயர்ந்தனர். காஞ்சனின் கணவர் ரமேஷ் படோலியா ஒரு ஆடை கடையை நடத்தி வந்தார். அர்ஜுன் கடர்காமில் உள்ள சுவாமிநாராயண் பிரிவினரால் நடத்தப்படும் ஒரு குருகுலப் பள்ளியில் படித்தார். குடும்பத்தினருக்கு கடர்காம் மற்றும் வாடியாவில் சொந்த வீடு உள்ளது. ரமேஷ் படோலியா இறந்த பிறகு, குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய காஞ்சன் ஒரு கடையை நடத்தினார்.

அர்ஜுன் 17 ஆண்டுகளாக லண்டனில் குடியேறி பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருந்தார். அங்கு ஒரு மரச்சாமான்கள் கடையை நடத்தி வந்தார். அவர் குஜராத்தின் கட்ச் பகுதியைச் சேர்ந்த பாரதியை மணந்தார். கோபால் 2017 இல் சூரத்தைச் சேர்ந்த ஒரு பாட்டிடார் பெண்ணை மணந்தார் என்றும், இந்த தம்பதியினர் 2023 இல் லண்டனுக்கு குடிபெயர்ந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சன் சில சமயங்களில் சூரத்திலும், சில சமயங்களில் தனது வாடியா கிராம வீட்டில் தங்குவார். அர்ஜுனும் கோபாலும் லண்டனில் ஒரே வீட்டில் தங்கி ஒரே மரச்சாமான்கள் வணிகத்தை நடத்தி வந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஞ்சனின் உறவினர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “விமான விபத்து பற்றி சமூக ஊடகங்கள் மூலம் அறிந்தோம். எனது அத்தையின் மருமகன் நில்லேஷ், அர்ஜுனின் தாயாரின் மாதிரிகள் தேவைப்படும், டிஎன்ஏ சோதனை இருக்கும் என்பதை அறிந்ததால், அவரை வதோதராவில் இறங்கும்படி அழைத்துச் சென்றார். நில்லேஷ் வதோதராவை அடைந்து, எனது அத்தை காஞ்சன்பென்னை அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் தனது இரத்த மாதிரிகளை வழங்கிய பின்னர் வாடியா கிராமத்திற்கு திரும்பினார்.”

“டிஎன்ஏ சோதனை அர்ஜுனின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. நாங்கள் அவரது இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளோம். அர்ஜுனின் இரண்டு மகள்களின் பாதுகாவலர் யார் என்பதை முடிவு செய்ய ஒரு குடும்பக் கூட்டம் நடைபெறும். மூத்தவள் ரியா லண்டன் பள்ளியில் படிக்கிறார். அர்ஜுனின் உடல் எங்களிடம் ஒப்படைக்கப்படுவதற்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்,” என்று அந்த உறவினர் கூறினார்.

airplane

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: