Advertisment

இடஒதுக்கீடு காலி இடங்கள் ரத்து இல்லை; யு.ஜி.சி வரைவு வழிகாட்டுதல் குறித்து மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம்

டெல்லி ஜே.என்.யு மாணவர் சங்கம் (ஜே.என்.யு.எஸ்.யு) யு.ஜி.சி தலைவர் எம். ஜெகதேஷ் குமாருக்கு எதிராக திங்கள்கிழமை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
வி.ஐ.டி., கே.ஐ.ஐ.டி சிறப்பு அங்கீகார விவகாரம் :  யுஜிசியிடம் மத்திய அரசு கேள்வி

யு.ஜி.சி வரைவு வழிகாட்டுதல்களுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. (எக்ஸ்பிரஸ் கோப்பு புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எஸ்சி, எஸ்டி, மற்றும் ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்த காலியிடத்திலும், இந்த வகுப்பினருக்கும் போதுமான அளவு விண்ணப்பதாரர்கள் இல்லாமல் இருந்தால், அந்த இடங்களை இடஒதுக்கீடு இல்லாத இடங்களாக அறிவிக்கப்படலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) முன்மொழிந்த வரைவு வழிகாட்டுதல்களுக்குப் பிறகு, இடஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை நீக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: No reserved posts can be de-reserved: Education ministry clarifies on draft UGC guidelines

‘உயர்கல்வி நிறுவனங்களில் இந்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்’ பங்கேற்பாளர்களிடம் இருந்து கருத்துகளைப் பெற பொது களத்தில் உள்ளன.

இந்த வரைவு வழிகாட்டுதல்கள் பல தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓ.பி.சி-களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சதி இருப்பதாகவும், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரச்னைகளில் மோடி அரசாங்கம் சடங்குக்கு அரசியல் மட்டுமே செய்து வருவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

டெல்லி ஜே.என்.யு மாணவர் சங்கம் (ஜே.என்.யு.எஸ்.யு) யு.ஜி.சி தலைவர் எம். ஜெகதேஷ் குமாருக்கு எதிராக திங்கள்கிழமை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பிரிவு இடங்களுக்கு இடஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை என்றும் அந்த மாதிரி இடஒதுக்கீடு நீக்கம் இருக்காது என்றும் ஜெகதேஷ் குமார் தெளிவுபடுத்தினார்.

“மத்திய கல்வி நிறுவனங்களில் (ஆசிரியர் பணியிடத்தில் இடஒதுக்கீடு) சட்டம், 2019-ன் படி, ஆசிரியர் பணியிடத்தில் நேரடி ஆட்சேர்ப்புக்கான அனைத்துப் பணிகளுக்கும் மத்திய கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.”

“இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, எந்த இடஒதுக்கீடு பதவியையும் இடஒதுக்கீடு நீக்கம் செய்யப்படக் கூடாது. 2019 சட்டத்தின்படி கண்டிப்பாக காலியிடங்களை நிரப்ப கல்வி அமைச்சகம் அனைத்து மத்திய கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவுகளை வழங்கியுள்ளது” என்று மத்திய கல்வி அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

மேலும், யு.ஜி.சி தலைவர் பதிவிட்டுள்ளார்: “கடந்த காலங்களில் மத்திய கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பிரிவு இடங்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை என்பதையும், அத்தகைய இடஒதுக்கீடு நீக்கம் செய்யப்படுவது இருக்காது என்பதையும் தெளிவுபடுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

“இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள அனைத்து பின்னடைவு பதவிகளும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் நிரப்பப்படுவதை உறுதி செய்வது அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் முக்கியம். யு.ஜி.சி-யின் புதிய வரைவு வழிகாட்டுதல்களின்படி: “எஸ்சி அல்லது எஸ்டி அல்லது ஓ.பி.சி-க்காக ஒதுக்கப்பட்ட ஒரு காலியிடத்தை, எஸ்சி அல்லது எஸ்டி அல்லது ஓ.பி.சி விண்ணப்பதாரர் தவிர வேறு ஒரு விண்ணப்பதாரரால் நிரப்ப முடியாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும், இடஒதுக்கீடு செய்யப்பட்ட காலியிடமானது, இடஒதுக்கீடு நீக்கம் செய்யப்பட்டு, இடஒதுக்கீடு இல்லாத இடமாக அறிவிக்கலாம். நேரடி ஆட்சேர்ப்பு விஷயத்தில், இடஒதுக்கீடு செய்யப்பட்ட காலியிடங்களை இட ஒதுக்கீடு ரத்து செய்வதற்கு பொதுவான தடை உள்ளது. எப்படியானாலும், அரிதான மற்றும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், குரூப் A சேவையில் உள்ள காலியிடத்தை பொது நலன் கருதி காலியாக இருக்க அனுமதிக்க முடியாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் பின்வரும் தகவலைக் கொடுத்து காலியிடத்தை இட ஒதுக்கீடு நீக்குவதற்கான முன்மொழிவைத் தயாரிக்கலாம்: முன்மொழிவு தேவைப்படும் பட்டியல் - பதவியை நிரப்புவதற்கான முயற்சிகள்; ஏன் அதை காலியாக இருக்க அனுமதிக்க முடியாது என்பதற்கான காரணங்கள் மற்றும் இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்த வேண்டும்.

குரூப் சி அல்லது டி-யில் இடஒதுக்கீடு நீக்குவதற்கான முன்மொழிவு பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவுக்குச் செல்ல வேண்டும், மேலும், குரூப் ஏ அல்லது பி என்றால் கல்வி அமைச்சகத்திடம் முழு விவரங்களையும் அளித்து தேவையான ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒப்புதல் பெற்ற பிறகு, பணியிடத்தை நிரப்பலாம் மற்றும் இட ஒதுக்கீடு முன்னோக்கி கொண்டு செல்லப்படலாம்” என்று வரைவு வழிகாட்டுதல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பதவி உயர்வு ஏற்பட்டால், இடஒதுக்கீடு செய்யப்பட்ட காலியிடங்களுக்கு எதிரான பதவி உயர்வுக்கு தகுதியான எஸ்சி மற்றும் எஸ்டி விண்ணப்பதாரர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றால், அத்தகைய காலியிடங்கள் இடஒதுக்கீடு நீக்கப்பட்டு மற்ற சமூகங்களின் வேட்பாளர்களால் நிரப்பப்படலாம்.

சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒதுக்கப்பட்ட காலியிடங்களின் இடஒதுக்கீட்டை நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் யு.ஜி.சி மற்றும் கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்படும்.

“காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ள பிரிவைச் சேர்ந்த எந்த ஒரு விண்ணப்பதாரரும் பரிசீலனை மண்டலத்தில் அல்லது நீட்டிக்கப்பட்ட பரிசீலனை மண்டலத்திற்குள் கிடைக்கவில்லை அல்லது ஆட்சேர்ப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஊட்டப் பணியாளர் பிரிவில் பதவி உயர்வுக்கு தகுதியுடையவராக இருந்தால், முன்மொழிவு பரிசீலிக்கப்படலாம்.”

“பல்கலைக்கழகத்தின் எஸ்சி, எஸ்டி-க்கான தொடர்பு அதிகாரியால் இடஒதுக்கீடு நீக்கத்திற்கான ஒப்புதல் பார்க்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. இடஒதுக்கீட்டை நீக்குவதற்கான முன்மொழிவு யு.ஜி.சி மற்றும் கல்வி அமைச்சகத்தில் உள்ள பொருத்தமான அதிகாரத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டது.”

மேலும், “பல்கலைக்கழகத்தின் எஸ்சி, எஸ்டிக்கான தொடர்பு அதிகாரிக்கும் நியமன அதிகாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் ஆலோசனை பெறப்பட்டு செயல்படுத்தப்படும்” என்று யு.ஜி.சி வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ugc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment