UK Strain Coronavirus Vaccine in India : நாவல் கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள், பிரிட்டனில் புதிய தொற்றுநோய் பரவும் போதிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்தியாவின் அரசு உயர் மருத்துவ நிபுணர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இருப்பினும், கோவிட் -19-க்கு எதிராக நிரூபிக்கப்படாத சிகிச்சையின் மோசமான பயன்பாடு வைரஸின் மீது “நோயெதிர்ப்பு அழுத்தத்தை” ஏற்படுத்துகிறது. இது பிறழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.
பிரிட்டனிலிருந்து சமீபத்தில் திரும்பி வந்த குறைந்தது ஆறு பேர் புதிய “விசாரணையின் மாறுபாட்டிற்கு” சாதகமாக இருப்பதாக அரசாங்கம் கடந்த செவ்வாயன்று அறிவித்தது. இதனை VUI-202012/01 என்று குறிப்பிடப்படுகின்றது.
பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் (நிம்ஹான்ஸ்) மூன்று பாசிட்டிவ் மாதிரிகளும், ஹைதராபாத்தில் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் (சி.சி.எம்.பி) இரண்டு மாதிரிகளும், புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (என்.ஐ.வி) ஒன்றும் கண்டறியப்பட்டன. புனேவில் உள்ள மாதிரி சென்னையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து வந்ததாக மகாராஷ்டிரா அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இந்த நபர்கள் அனைவரும் அந்தந்த மாநில அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட சுகாதார வசதிகள் கொண்ட ஒற்றை அறையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நெருங்கிய தொடர்புகளும் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இணை பயணிகள், குடும்ப தொடர்புகள் மற்றும் பிறருக்கு விரிவான தொடர்பு தடமறிதல் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாதிரிகள் மீது மரபணு வரிசை முறை நடந்து வருகிறது” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை இங்கிலாந்திலிருந்து பல்வேறு இந்திய விமான நிலையங்களில் சுமார் 33,000 பயணிகள் தரையிறங்கியிருந்தனர். “இந்த பயணிகள் அனைவரும் மாநிலங்களால் ஆர்டி-பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதுவரை, [வைரஸின் அனைத்து வகைகளுக்கும்] 114 மட்டுமே கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டுள்ளது” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து திரும்பியவர்களின் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் பாஸிட்டிவ் முடிவுகள் கொண்ட அனைத்து மாதிரிகளும் மரபணு வரிசை முறை மூலம் வைக்கப்படும் என்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், விரிவான கண்காணிப்பின் ஒரு பகுதியாக, நாட்டின் பொது மக்கள் தொகையில் 5 சதவிகித பாசிட்டிவ் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் என்றும் பூஷன் கூறினார்.
சர்வதேச பயணிகளிடமிருந்து மாதிரி சோதனைகள் மற்றும் வரிசைப்படுத்துதல் தவிர, இந்திய SARS-CoV-2 ஜினோமிக்ஸ் கூட்டமைப்பு (Indian SARS-CoV-2 Genomics Consortium – INSACOG), மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகளை வரிசைப்படுத்துவதையும் மேற்கொள்ளும் என்று இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே. விஜயராகவன் கூறினார்.
“… இந்த வகையான மாறுபாடுகள் வேறு இடங்களில் எழக்கூடும் மற்றும் இந்த வைரஸின் பரவலான பரவலைக் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று பேராசிரியர் விஜயராகவன் கூறினார். “நாங்கள் பிரதிநிதி மாதிரிகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மாதிரிகளை வரிசைப்படுத்துவது மட்டுமல்லாமல், தொற்றுநோய்கள் அதிகரித்துள்ளனவா என்பதை ஆய்வகங்களில் உள்ள மாதிரிகளையும் சோதித்துப் பார்ப்போம். மேலும், எந்தவொரு மாறுபாட்டின் பரவலும் அதிகரித்துள்ளதா என்பதைப் பார்க்கக் கள ஆய்வுகள் செய்வோம்”
எப்படியிருந்தாலும் புதிய ஸ்ட்ரெயின்களுக்கு எதிராகத் தடுப்பூசிகள் செயல்படும் என்று பேராசிரியர் விஜயராகவன் வலியுறுத்தினார். “இந்த தடுப்பூசிகள் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் அறிவிக்கப்பட்ட புதிய வகை வைரஸ்களுக்கு எதிராக செயல்படும். பெரும்பாலான தடுப்பூசிகள் வைரஸின் ஸ்பைக்கை குறிவைக்கின்றன. இந்த வேறுபாட்டில் மாற்றங்கள் உள்ளன. எனவே, தடுப்பூசி வேலை செய்யுமா என்ற கவலை உள்ளது.. ஆனால், தடுப்பூசிகள் நமது நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டி பலவிதமான பாதுகாப்பு ஆன்டிட்பாடிகளை உருவாக்குகின்றன. எனவே மாறுபாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் தடுப்பூசிகளைப் பயனற்றதாக மாற்றுவதற்கு போதுமானதாக இல்லை. இது ஓர் பாசிட்டிவ் உறுதி” என்கிறார்.
“… இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வகைகள் பாலிக்குளோனல் ஆன்ட்டிபாடி ரெஸ்பான்ஸில் சமரசம் செய்யவில்லை. அனைத்து தடுப்பூசிகளும் தற்போது பாலிக்குளோனல் ஆன்டிட்பாடி மறுமொழிகளாக இருக்கின்றன. அவை புரதத்தின் பல பகுதிகளைக் குறிவைக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை இந்த மாற்றங்களால் பாதிக்கப்படுவதில்லை” எனப் பேராசிரியர் விஜயராகவன் கூறினார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பேராசிரியர் பல்ராம் பார்கவா, மருத்துவர்கள் நன்மைகளைக் காட்டும் சிகிச்சைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். “இந்த மாறுபாடுகள் ஏன் ஏற்பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. வைரஸின் நோயெதிர்ப்பு அழுத்தம் காரணமாக இந்த வேறுபாடுகள் ஏற்படுகின்றன. இந்த நோயெதிர்ப்பு அழுத்தம் சுற்றுச்சூழல், ஹோஸ்ட், சிகிச்சை அல்லது பிற முறைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.
“ஆகையால், விஞ்ஞான சமூகத்தின் பார்வையில் நாம் வைரஸுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியைச் செலுத்தக்கூடாது என்பது முக்கியம். பயனடையப் போகும் சிகிச்சையின் நியாயமான பயன்பாட்டை நாம் பராமரிக்க வேண்டும். நன்மை நிறுவப்படவில்லை என்றால், அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது. இல்லையெனில், இது வைரஸின் மீது பெரும் நோயெதிர்ப்பு அழுத்தத்தை ஏற்படுத்தும். பின்னர் அது மேலும் பிறழ்வு பெறும். நன்கு நிறுவப்பட்ட சிகிச்சைகள் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று பேராசிரியர் பார்கவா கூறினார்.
இந்தியாவில் கோவிட்-19 வழக்குகளில் 52 சதவிகிதம் 18-44 வயதுக்குட்பட்டவர்கள் என்று சுகாதார செயலாளர் கூறினார்.
“கோவிட்-19 வழக்குகளை வயது அடிப்படையில் பகுப்பாய்வு செய்தால், அவர்களில் 8 சதவிகிதம் பேர் 17 வயதுக்குக் குறைவானவர்கள் என்பதைக் காட்டுகிறது. 13 சதவிகிதம் பேர் 18-25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 39 சதவிகிதம் பேர் 26-44 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 26 சதவிகிதம் பேர் 45-60 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் மற்றும் 14 சதவிகிதம் பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்றும் காட்டுகின்றன. எனவே, பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் இளைய வயதினர்தான்” என்று பூஷன் கூறினார்.
“ஆனால், இறப்பு பகுப்பாய்வில் இந்த நிலைமை வேறுபட்டது. 1 சதவிகித இறப்புகள் 17 வயதிற்குப்பட்டவர்கள்; 1 சதவிகிதம் பேர் 18-25 வயதுக்குட்பட்டவர்கள்; 10 சதவிகிதம் பேர் 26-44 வயதுக்குட்பட்டவர்கள்; 33 சதவிகிதம் பேர் 45-60 வயதுக்குட்பட்டவர்கள்; 55 சதவிகிதம் பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். இது இளைஞர்கள் எளிதில் மீட்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும், வயதான மக்களில் இணை நோயுற்ற தன்மை அதிகமாக இருப்பதால், அந்த வயதினரிடையே அதிகமான இறப்புகள் பதிவாகின்றன” என்று குறிப்பிட்டார்.
ஹைதராபாத்தில், சி.சி.எம்.பி.யின் மரபணு வரிசைப்படுத்துதல் குழுவின் தலைவர் டாக்டர் திவ்யா தேஜ் சவுபதி, “இந்தியாவில் புதிய மாறுபாடு உள்ளதா என்பதை சரிபார்க்க, வைரஸ் மரபணு வரிசை முறை முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும். பாரம்பரிய சாங்கர் வரிசை முறை மற்றும் நவீன அடுத்த ஜென் வரிசை முறை கருவிகள் இரண்டையும் நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்” என்று கூறினார்.
சி.சி.எம்.பி இயக்குநர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், “தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. மற்றவர்கள் முன்னிலையில் இருக்கும்போது மாஸ்க் பயன்படுத்துவது, நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, உடல் இடைவெளியைப் பராமரிப்பது ஆகியவை இந்த வைரஸைத் தவிர்ப்பதற்கு மிகவும் பயனுள்ள மற்றும் சாத்தியமான வழிகள். புதிய மாறுபாட்டின் பரவலின் அளவை மதிப்பிடுவதற்கு வைரஸின் விரிவான மரபணு கண்காணிப்பைத் தொடங்குவது மிகவும் முக்கியம்” என்று அவர் சுட்டிக் காட்டினார். மேலும், டாக்டர் மிஸ்ரா கூறுகையில், “இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது பெரிய மக்கள்தொகையை இந்தியா கொண்டுள்ளது” என்றும் எச்சரித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Uk strain coronavirus vaccine in india tamil news
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்