வடமாநில யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழர்கள், வெயிலின் கொடுமைக்கு பலியாகியுள்ள சம்பவம், பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த 5 பேர் காசி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்றனர். யாத்திரையை முடித்துவிட்டு கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை திரும்பிக்கொண்டிருந்தனர். ரயில், உத்தரபிரதேசம் வழியாக வந்தபோது, அவர்களுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் சிகிச்சைபலனின்றி மரணமடைந்தனர். இவர்களின் மரணத்திற்கு, வடமாநிலங்களில் நிலவிவரும் அதிக வெப்பநிலையால், ரயிலின் உட்புறத்தில் ஏற்பட்ட அதீத வெப்பமே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்கு பிறகே, மரணத்திற்கான உண்மைக்காரணம் தெரியவரும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது