/indian-express-tamil/media/media_files/2025/09/18/suresh-gopi-2-2025-09-18-22-24-56.jpg)
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தனது திரிசூர் தொகுதியில் நடத்திய “கால்வாய் சபை” (உள்ளூர் மக்களுடன் உரையாடல்) மீண்டும் சர்ச்சைக்குள்ளானது. ஒரு கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடியால் தனது வைப்புத்தொகையை இழந்த ஒரு மூத்த பெண், அவரிடம் உதவி கோரியபோது, அதற்கு சுரேஷ் கோபி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிச்சூரில் உள்ள இரிஞ்சலக்குடாவில் நடந்த ஒரு கால்வாய் சபை நிகச்சியின் வீடியோவில், கருவனூர் கூட்டுறவு வங்கியின் ஒரு வைப்புத்தொகையாளர், 2023-ல் நடந்த நிதி மோசடி காரணமாக தனது வைப்புத்தொகையைத் திரும்பப் பெற அமைச்சர் உதவுவாரா என்று கேட்பது தெரிகிறது. இந்த மோசடி வங்கியிலிருந்து வைப்புத்தொகைகள் கரைய வழிவகுத்தது.
“சேச்சி, ரொம்பப் பேசாதீங்க. ஈ.டி. அந்தப் பணத்தை வங்கிக்கு திருப்பி அனுப்பியுள்ளது என்று உங்கள் முதல்வரிடம் சொல்லுங்கள், அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று அவர் கூறுகிறார்.
அந்தப் பெண் முதலமைச்சரைச் சந்திக்க உதவுவாரா என்று கேட்டபோது, கோபி கிண்டலாக, “அப்போ நீங்க என் நெஞ்சு மேல ஏறிக்கோங்க. உங்க அமைச்சர் இங்கதானே இருக்காரு?” என்று பதிலளித்தார்.
அந்தப் பெண், “நீங்களும் ஒரு அமைச்சர் தானே” என்று கூறியபோது, கோபி, “நான் இந்த நாட்டின் அமைச்சர்” என்று பதிலளித்தார்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இவர், மற்றொரு “கால்வாய் சபை”யின்போது ஒரு வயதான மனிதரை விரட்டியடித்த வீடியோ சர்ச்சைக்குள்ளான ஒரு வாரத்திற்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. கொச்சு வேளாவுதியன் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், தனது சிதிலமடைந்த வீட்டை சரிசெய்ய உதவி கோருவது அந்த வீடியோவில் காணப்படுகிறது. கோபி அவரை நிராகரித்த பிறகு, ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அந்த 80 வயது முதியவருக்கு உதவ முன்வந்தது.
புதன்கிழமை நடந்த மற்றொரு சபையில் கோபி அந்த சர்ச்சை பற்றியும் குறிப்பிட்டார்.
“ஒரு சிறிய தவறு மூலம் இந்த ஒளியை அணைக்க முடியும் என்று நினைக்காதீர்கள். அது நடக்காது. வேளாவுதியனுக்கு ஒரு புதிய வீடு கிடைத்தது நல்லது. நான் மேலும் பல வேளாவுதியன்களை அங்கே அனுப்புவேன். கட்சி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) தயாராக இருக்கட்டும். நான் ஒரு பட்டியலை வெளியிடுவேன், மேலும் அனைத்து 14 மாவட்டங்களுக்கும் செல்வேன்” என்று அவர் கூறினார்.
இந்த சம்பவங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகரன், அனைத்து தொகுதிகளிலும் மனுக்களை சமர்ப்பிக்க கட்சி ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.
“எனக்கு இந்த விவகாரத்தின் பின்னணி தெரியாது. அனைத்து தொகுதிகளிலும் எங்களுக்கு உதவி மையங்கள் உள்ளன, அங்கு மக்கள் தங்கள் மனுக்களை அளிக்கலாம். நாங்கள் அனைவரும் வளர்ந்த கேரளாவை உருவாக்க மக்களுக்காக உழைக்கிறோம்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.