Advertisment

கிழக்கு ராஜஸ்தானில் கோலோச்சும் வசுந்தரா: 'அடுத்த பெரிய தலைவர் யார்?'

ராஜஸ்தானில் கோட்டா, பூண்டி, பரான் மற்றும் ஜலாவர் போன்ற மாவட்டங்களில் உள்ள 17 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இப்பகுதியில் பா.ஜக முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

author-image
WebDesk
New Update
Vasundhara Raje rajasthan assembly polls Tamil News

முதல்வர் பதவி குறித்தும், கட்சி முடிவுகள் குறித்தும் பகிரங்கமாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் வசுந்தரா ராஜே இதில் மிகவும் கவனமாக இருக்கிறார்.

Rajasthan: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 7ம் தேதி தொடங்கி வருகிற 30ம் தேதி வரை நடக்கிறது. இவற்றில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25ம் தேதி முதல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 

Advertisment

ராஜஸ்தானில் பூண்டி சாம்ராஜ்யத்தின் நினைவுகளாக உள்ள ஹடோதி பகுதி, எப்போதும் பா.ஜ.க-வின் கோட்டையாக இருந்து வருகிறது. அங்கு முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வரான பைரோன் சிங் ஷெகாவத் மற்றும் வசுந்தரா ராஜே இருவரும் இப்பகுதியில் இருந்து தான் வெற்றி பெற்றனர். பைரோன் சிங் ஷெகாவத் முதன்முதலில் 1977ல் சாப்ரா தொகுதியில் வெற்றி பெற்றார். மேலும், வசுந்தரா ராஜே இப்போது 20 ஆண்டுகளாக ஜால்ராபட்டனை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: In her bastion, Vasundhara has her base but many ask who’s next

இந்தத் தேர்தலிலும், கோட்டா, பூண்டி, பரான் மற்றும் ஜலாவர் போன்ற மாவட்டங்களில் உள்ள 17 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இப்பகுதியில் பா.ஜக முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், அங்கு உற்சாகம் முடக்கப்பட்டுள்ளது, அத்துடன் மாநிலத்தின் பிற பகுதிகளைப் போலவே உணரக்கூடிய அலைகள் எதுவும் இல்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தற்போதைய முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக களத்தில் வெளிப்படையான கோபம் இல்லாதது, அவரது அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் சமூக நீதி முயற்சிகளுக்கு இங்கு பாராட்டுக்கள் உள்ளன. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது காரணம், மாநில பா.ஜ.க-வில் வசுந்தரா ராஜேவின் இடம் குறித்த நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. 

"அவர் தான் எங்களுக்கு எல்லாமே. தற்போது பா.ஜ.க-வில் முதல்வர் பதவிக்கு போட்டி போடக் கூடிய ஒரே தலைவர் வசுந்தரா ராஜே  தான்” என்கிறார் தாரா ஸ்டேஷனின் சிறு வணிகரான ராகேஷ் மீனா. 

“எங்களது கிராமத்தில் எல்லோரும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். அவர் செய்த வளர்ச்சிப் பணிகளால் எங்களது நகரம் இப்படித் தெரிகிறது. பெண்களாகிய எங்களுக்கும் அவர் நல்லவராக இருப்பார்,” என்கிறார் இல்லத்தரசியான சோனியா சைனி. 

ஜல்ராபட்டனில் உள்ள சத்குரு கபீர் ஆசிரமத்தின் சாமியாரான ராம்பாபு, "ரயில் பாதைகள், மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் ஸ்டேடியம், பஸ் டிப்போ என அனைத்து உள்ளூர் மேம்பாட்டுத் திட்டங்களையும் வசுந்தரா ராஜே தான் கொண்டு வந்தார். ஜல்ராபடான் மாநிலத்தின் ஒவ்வொரு நகரத்திலும் முன்னணியில் உள்ளது அவரால் மட்டுமே," என்று கூறுகிறார்.

வசுந்தரா ராஜே இப்பகுதியில் மிக முன்னணி பா.ஜ.க தலைவராக இருக்கிறார். அவரது "முடிவெடுக்கும்" மற்றும் "வலுவான தலைமைத்துவத்திற்காக" பாராட்டப்படுகிறார். அவரது அரச பரம்பரை கூடுதல் பிளஸ் ஆக உள்ளது. மாநில பா.ஜ.க தலைமைப் பதவியில் இருந்து அவர் படிப்படியாக ஒதுக்கப்படுவதையும் மக்கள் அறிந்துள்ளார்கள். கட்சி நிகழ்ச்சிகளில் அவர் இல்லாதது, அவரது வேட்புமனு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வேட்புமனுகளை அறிவிப்பதில் தாமதம் போன்றவற்றையும் மக்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்.  

தற்செயலாக, ராஜஸ்தான் மாநிலத்தின் பிற பகுதிகள் காங்கிரஸுக்கு வாக்களித்தபோதும், வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவானது, ஹடோதி பகுதியில் பா.ஜ.க தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது. 2013ல், இப்பகுதியில் இருந்து 17 இடங்களில் 16 இடங்களில் பா.ஜ.க வென்றது. இதேபோல் 2018ல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, அக்கட்சி இப் பகுதியில் ​​7 இடங்களை மட்டுமே வென்றது. ஆனால் பா.ஜ.க 3 இடங்கள் கூடுதலாக மொத்தம் 10 இடங்களை வென்றது. 

கோட்டாவில் அசோக் கெலாட் அரசாங்கத்தின் ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெரிடேஜ் சம்பல் நதி முகப்புத் திட்டம், காங்கிரஸ் இப்பகுதிக்குள் நுழைய முயற்சிக்கும் ஒரே வழியாக இருந்து வருகிறது. 

ராகேஷ் மீனா போன்ற சில வசுந்தரா ராஜே ஆதரவாளர்கள் தங்களது நம்பிக்கையை வைத்துக்கொண்டு, தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையில் எல்லாம் தொங்கிக்கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். "அவர் பா.ஜ.க தலைமைக்கு விருப்பமானவர் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அவர் ஆட்டத்தை மாற்றிவிடுவார்" என்று கூறுகிறார்.

ஜல்ராபட்டனில் வசிப்பவரும் டிரக் டிரைவருமான ஜஹாங்கீர் படான் பேசுகையில், “இது மேடமின் ராஜ்ஜியம். அவர்கள் அவரை முதல்வர் ஆக்காவிட்டாலும், இது அவரது ராஜாங்கமாக தொடரும்." என்று கூறினார். 

அதே நேரத்தில், நவம்பர் 25 தேர்தலில் பா.ஜ.க கட்சி வெற்றி பெற்றால், வசுந்தரா ராஜே பா.ஜ.க அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க முடியாது என்ற சாத்தியக்கூறுடன் சமரசம் செய்துகொண்டு, எதிர்நோக்கும் மற்ற பா.ஜ.க ஆதரவாளர்களும் உள்ளனர். “பா.ஜ.க-வில் பல தலைவர்கள் உள்ளனர். தலைமை அவரை முதல்வராக்க முடியாது. ஆனால் இப்போது மோடி-ஜியால் மக்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை,” என்கிறார் கோட்டாவில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஜி.எல் கவுர். 1970 களில் ஜனசங்கத்தின் நாட்களில் இருந்து பா.ஜ.க ஆதரவாளராக இருந்ததாகக் கூறுகிறார்.

மற்றொரு தீவிர பா.ஜ.க ஆதரவாளரான பவன் குமார், தாராவில் சாலையோரம் கச்சோரி விற்கிறார். அவர் வசுந்தரா ராஜே தான் “இயற்கையான விருப்பம்” என்றும், “பொதுமக்களுக்கு அவரை மட்டுமே தெரியும்”, “இது கட்சியின் முடிவு என்றும் கூறுகிறார். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அது யாரைத் தேர்ந்தெடுக்கிறது என்று பார்ப்போம்." என்று அவர் கூறுகிறார். 

கருத்துக்கணிப்புகள் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பை வழங்குவதால், பல்வேறு பா.ஜ.க முகாம்களில் பல பெயர்கள் உலா வருகின்றன. “பாபா பாலக்நாத் மற்றும் (மத்திய அமைச்சர்) கஜேந்திர ஷெகாவத் பற்றி கேள்விப்பட்டோம். ஆனால் பாலக்நாத் தனது சொந்த இடத்தில் (திஜாரா) வெற்றி பெற வேண்டும். மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். ஷெகாவத் (தேர்தல்களில்) கூட போட்டியிடவில்லை,” என்று பூண்டி நகரில் உள்ள முகேஷ் சாவ்தா கூறுகிறார்.

ரவி தத் சர்மா மற்றும் ரகுநந்தன் சிங், ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஹவேலி கட்கவுன் குடியிருப்பாளர்கள், வசுந்தரா ராஜேவைத் தவிர மற்ற பரிந்துரைகளை நிராகரிக்கின்றனர். “வாழ்க்கை சாக்கடையில் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால், அவர் அதனை உயர்த்தினார்" என்று கூறுகிறார்.

மற்ற இரண்டு போட்டியாளர்கள் பற்றி கேட்கையில் ரகுநந்தன் சிங், “கஜேந்திர சிங் (ஷேகாவத்) மாநிலத்தின் இந்தப் பக்கத்தில் யாருக்கும்  தெரியவில்லை. நாங்கள் மஹந்த் பாலக்நாத்தை பார்த்தது கூட இல்லை. அவர் ஒரு சாமியார் என்பதால், அவரை யோகி ஆதித்யநாத் ஆகப் போவதில்லை. ஒருவர் தாடி வைத்திருப்பதால், அது அவரை மோடியாக மாற்றாது." என்று கூறினார். 

ஆதித்யநாத் போன்ற நாத் மதப் பிரிவைச் சேர்ந்த பாலக்நாத், யோகி நம்பர் 2 ஆக தன்னை வடிவமைத்துக் கொள்கிறார். இருவரும் மதத் தலைவர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கில் கண்டிப்பானவர் என்ற உத்திர பிரதேச முதல்வரின் நற்பெயரைப் போலவே படம் வரைந்து கொள்கிறார்.

வசுந்தரா ராஜே ஓரங்கட்டல் பா.ஜ.க-வின் செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறிய ராஜஸ்தானின் மத்திய பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைப் பேராசிரியர் எஸ். நாகேந்திர அம்பேத்கர், “இது ஹடோதி பிராந்தியத்திலும் அதைச் சுற்றியுள்ள வாக்காளர்களுக்கு அவர் வழங்கும் செய்தியைப் பொறுத்தது. இது எதிர்மறையான செய்தியாக இருந்தால், பா.ஜ.க.வுக்கு பாதகமான பாதிப்பை சந்திக்க நேரிடும். ஆனால் அவர்களின் நம்பிக்கையை அவர் காப்பாற்றினால், அது கட்சியை மோசமாக பாதிக்காது." என்றார். 

முதல்வர் பதவி குறித்தும், கட்சி முடிவுகள் குறித்தும் பகிரங்கமாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் வசுந்தரா ராஜே இதில் மிகவும் கவனமாக இருக்கிறார். மூன்று முறை எம்.பி.யாக இருந்த அவரது மகன் துஷ்யந்த் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றிப் பேசும் போது, ​​“இப்போது ஓய்வு பெற முடியும் என்று உணர்கிறேன்” என்று அவர் கூறியதை, அவர் ஒரு நாள் முடிவு எடுக்க தயாராக இருக்கிறார் என்பதற்கான அறிகுறியாக இருக்கிறது. தீவிர அரசியலில் தொடர்ந்து இருப்பார் மற்றும் ஓய்வு பெறுவது அவரது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றும் கூறப்படுகிறது. 

"அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். கட்சித் தலைமைக்கான விருப்பத்தையும் அவர் திறந்து வைத்திருக்கிறார்,” என்று மாநிலக் கட்சி செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறுகிறார்.

உண்மையில், இரண்டு முறை முதல்வராக இருந்த ஒரே மாநில பா.ஜ.க தலைவர் மட்டுமே மாநிலம் முழுவதும் பேரணிகள் மற்றும் சாலை நிகழ்ச்சிகளில் உரையாற்றுகிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, வசுந்தரா ராஜே ஏற்கனவே குறைந்தது 28 தொகுதிகளை பார்வையிட்டுள்ளார். சமீபகாலமாக கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர் அழைக்கப்படாததால் தான் அவர் பங்கேற்கவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சிலர் வசுந்தரா ராஜே வெளியேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது பொதுவாக அரசியல்வாதிகளுக்கு எளிதில் வராது.  தீவிர பா.ஜ.க ஆதரவாளரும், பூண்டி கோட்டைக்கு அருகிலுள்ள தொழிலதிபருமான அர்விந்த் குமார் பேசுகையில், “வசுந்தரா ராஜேவுக்கு நேரம் கிடைத்தது. அவர் இப்போது தனது இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும். இளைஞர்கள் பொறுப்பேற்கட்டும்." என்று கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rajasthan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment