Advertisment

பெண் சிங்கத்திற்கு 'சீதா', ஆண் சிங்கத்திற்கு 'அக்பர்' என பெயரிடல்; மேற்கு வங்க பூங்காவுக்கு எதிராக வி.எச்.பி வழக்கு

மேற்கு வங்க உயிரியல் பூங்காவில் பெண் சிங்கத்திற்கு 'சீதா' ஆண் சிங்கத்திற்கு, 'அக்பர்' எனப் பெயரிடல்; மத உணர்வுகளை புண்படுத்துவதாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடிய வி.எச்.பி

author-image
WebDesk
New Update
lioness

மேற்கு வங்க உயிரியல் பூங்காவில் பெண் சிங்கத்திற்கு 'சீதா' ஆண் சிங்கத்திற்கு, 'அக்பர்' எனப் பெயரிடல்; மத உணர்வுகளை புண்படுத்துவதாக கல்கத்தா உயர் நீதிமன்றத்தை நாடிய வி.எச்.பி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ravik Bhattacharya

Advertisment

சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள காட்டு விலங்குகள் பூங்காவில், சீதா தேவியின் பெயரை பெண் சிங்கத்திற்கும், முகலாய பேரரசர் அக்பரின் பெயரை ஆண் சிங்கத்திற்கும் சூட்டியதற்கு எதிராக, ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் சர்க்யூட் பெஞ்சில் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) வழக்கு தொடர்ந்துள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க: VHP moves Calcutta HC over lioness named ‘Sita’, lion ‘Akbar’ at Siliguri zoo; calls it ‘irrational, sacrilegious’

அறிக்கைகளின்படி, பிப்ரவரி 12 அன்று விலங்கு பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, திரிபுராவின் செபாஹிஜாலா உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் மற்ற எட்டு விலங்குகளுடன் சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுவில், சிங்கங்களுக்கான அத்தகைய பெயர்கள் "பகுத்தறிவற்றவை", "தர்க்கமற்றவை" மற்றும் "நிந்தனைக்கு சமமானவை" என்று VHP கூறியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 20-ம் தேதி நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

வி.ஹெ.ச்பி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: பிப்ரவரி 8, 2024 அன்று, செபஹிஜாலா விலங்கியல் பூங்கா, ஒரு ஆண் சிங்கம் மற்றும் ஒரு பெண் சிங்கத்தை மற்ற எட்டு விலங்குகளுடன் சிலிகுரியில் உள்ள வடக்கு வங்காள வனவிலங்குகள் பூங்காவிடம் விலங்கு பரிமாற்ற திட்டத்திற்காக ஒப்படைத்தது... வங்காள சஃபாரி பூங்கா பெண் சிங்கத்திற்கு 'சீதா' என்று பெயரிட்டுள்ளது, சிங்கத்திற்கு சீதாஎன்ற பெயரைப் பயன்படுத்துவதன் மூலம், சனாதன தர்மத்தின் மத உணர்வுகளைப் பூங்கா நிர்வாகம் புண்படுத்தி உள்ளது.”

சிங்கத்திற்கு மத தெய்வமான சீதையின் பெயரை வைப்பது பகுத்தறிவற்றது, நியாயமற்றது... மூர்க்கத்தனமான பெயரிடல் மனுதாரர்களின் மத உணர்வுகளை கோபப்படுத்தியுள்ளது. மத தெய்வங்களின் பெயரை விலங்குகளுக்கு பெயரிடுவது மிகவும் புனிதமற்றது மற்றும் தெய்வ நிந்தனைக்கு சமமானது என்று மனுதாரர் குறிப்பிடுகிறார்…” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வி.எச்.பி.,யின் கூற்றுப்படி, அதன் பிரதிநிதிகள் மாநில வன அதிகாரிகளை பலமுறை சந்தித்தனர் மற்றும் பெயர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். “பெண் சிங்கத்திற்கு சீதை என்றும், ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெயரிட்டுள்ளனர். இது எப்படி முடியும்? இது நமது மத உணர்வுகளை புண்படுத்தவில்லையா? வனத்துறையின் ஒவ்வொரு அலுவலகமாகச் சென்றோம். யாரும் எங்களை கவனிக்கவில்லை, எனவே நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது,” என்று வி.எச்.பியின் ஜல்பைகுரி பிரிவு தலைவர் துலால் சந்திர ராய் கூறினார்.

"சூழலின் அவசரத்தின் வெளிச்சத்தில், சிங்கத்திற்கு மதச்சார்பற்ற பெயரைச் சூட்டுவது மற்றும் விலங்கியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு மதப் பெயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது உள்ளிட்ட உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வி.எச்.பி ஒரு ரிட் மனு மூலம் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது. நீதியையும், மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதையும் நாங்கள் கோருகிறோம், மேலும் இதுபோன்ற விலங்குகளுக்கு பெயர் சூட்டுவதில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வி.எச்.பி தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

வி.ஹெச்.பி முதலில் இந்த பிரச்சினை தொடர்பாக மாநில அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது. அதன்பிறகு, ஜல்பைகுரியில் உள்ள கல்கத்தா உயர்நீதிமன்ற சர்க்யூட் பெஞ்சில் நாங்கள் மனு தாக்கல் செய்தோம். இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் பெயரை விலங்குகளுக்கு பெயரிடுவது மத உணர்வுகளையும் உணர்வுகளையும் புண்படுத்துவதாக உணர்கிறோம். இந்த விவகாரம் பிப்ரவரி 16ஆம் தேதி குறிப்பிடப்பட்டு, பிப்ரவரி 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்என்று வி.எச்.பி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுபங்கர் தத்தா சிலிகுரியில் இருந்து தொலைபேசியில் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொலைபேசியில் பேசிய மேற்கு வங்க வனத்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான பிர்பாஹா ஹன்ஸ்தா, திரிபுரா உயிரியல் பூங்காவால் விலங்குகளுக்கு பெயர் சூட்டப்பட்டதாகக் கூறினார். மேலும் வி.எச்.பி.,யை தாக்கிய பிர்பாஹா ஹன்ஸ்தா, அவர்கள் "கேவலமான அரசியல்" செய்வதாக குற்றம் சாட்டினார்.

அவர்கள் செய்வது கேவலமான அரசியல். திரிபுரா உயிரியல் பூங்காவில் இருந்து எங்களிடம் வந்த விலங்குகளுக்கு நாங்கள் பெயரிடவில்லை. நாங்கள் பெயர்களை சூட்டினோம் என்று சொல்வது முற்றிலும் தவறு. விலங்குகளுக்கு முறைப்படி பெயர் வைப்பவர் நமது முதல்வர். விலங்குகள் திரிபுராவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து வந்தவை, அங்கு சில பெயர்களை கொடுத்திருக்கலாம்” என்று அமைச்சர் கூறினார்.

அக்பர் பெயரிடப்பட்ட சிங்கத்திற்கு ஏழு வயது எட்டு மாதங்கள், சீதா பெயரிடப்பட்ட சிங்கத்திற்கு ஐந்து வயது மற்றும் ஆறு மாதங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர், தற்போது இரண்டு சிங்கங்களும் தனித்தனி அடைப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஜோடியை ஒன்றாக சஃபாரியின் காட்சிப் பகுதியில் வைக்க குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். ஆதாரங்களின்படி, 297 ஹெக்டேர் பூங்காவில் 20 ஹெக்டேர் பரப்பளவு சிங்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

திரிபுராவில் உள்ள செபஹிஜாலா உயிரியல் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “விலங்கு பரிமாற்ற திட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு வங்காள வனவிலங்கு பூங்காவிற்கு ஒரு ஜோடி சிங்கங்கள் அனுப்பப்பட்டன. இரண்டு புலிகள், தங்க சிங்கவால் குருவிகள், வெள்ளி சிங்கவால் குருவிகள் மற்றும் மலை மேனாக்களுக்கு ஈடாக நான்கு மான்கள், இரண்டு சிங்கங்கள், இரண்டு குரங்குகள் மற்றும் இரண்டு சிறுத்தைகளை அனுப்பியுள்ளோம். செபஹிஜாலாவிலிருந்து முறையே ராம் என்ற ஆண் சிங்கத்தையும், சீதா என்ற பெண் சிங்கத்தையும் அனுப்பியிருந்தோம். சேருமிடத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது” என்று கூறினார்.

நாட்டின் அனைத்து உயிரியல் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் அடையாளம் காணக்கூடிய குறியீட்டுடன் எந்தவொரு விலங்கும் அடையாளம் காணப்படுவதாக அந்த அதிகாரி கூறினார். குறியீடானது விலங்குகளுக்கான ஒரே உண்மையான அடையாளமாகும், மேலும் திரிபுராவில் இருந்து அனுப்பப்பட்ட சிங்கங்களின் அதிகாரப்பூர்வ பதிவுகள் அவற்றின் அடையாளக் குறியீடுகளுடன் ராம் மற்றும் சீதா என்று பெயரிடப்பட்டுள்ளன.

திரிபுராவின் பழமையான மற்றும் மிகப் பெரிய உயிரியல் பூங்கா மற்றும் சரணாலயமான செபாஹிஜாலா உயிரியல் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயம், கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டு முதல் முறையாக விலங்கு பரிமாற்றத் திட்டத்தைக் கொண்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்: தேப்ராஜ் டெப், திரிபுரா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

West Bengal Vhp Lions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment