Advertisment

லவ் ஜிஹாத், மத மாற்றம், சனாதன தர்மம்... நாடு தழுவிய பிரச்சார பயணத்திற்கு வி.ஹெச்.பி ரெடி!

'இந்த சுற்றுப்பயணம் மூலம் மதமாற்றம் மற்றும் லவ் ஜிஹாத் அச்சுறுத்தலுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்' என்று விஸ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறினார்.

author-image
WebDesk
New Update
VHP plans shaurya jagran yatra

'யாத்திரையின் போது நடைபெறும் பொதுக்கூட்டங்களில் சனாதன தர்மம் குறித்து விவாதிக்கப்படும்' என விஸ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறினார்.

India: இந்து முன்னணி அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் (Vishva Hindu Parishad - VHP) வருகிற 30ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை வரை நாடு தழுவிய 'சவுரிய ஜாக்ரன் யாத்ரா'-வை (வீர சுற்றுப்பயணம்) தொடங்க உள்ளது. இந்து தர்மத்தின் மீது சமூகத்தை "மீண்டும் உற்சாகப்படுத்த"-வும் "லவ் ஜிஹாத், மதமாற்றம் மற்றும் சனாதன தர்மம்" பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குழுக்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 

Advertisment

மேலும், "தர்ம யோதாக்கள்" அல்லது மதப் போர்வீரர்கள், "மத விரோத நடவடிக்கைகள்" போன்றவற்றின் மீது தங்களது பார்வையை வைத்திருக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வு ஜனவரி 2024ல் திட்டமிடப்பட்ட அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்னதாக நடக்கிறது. 

இதுகுறித்து வி.எச்.பி செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், “இந்த சுற்றுப்பயணம் மூலம் மதமாற்றம் மற்றும் லவ் ஜிஹாத் அச்சுறுத்தலுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். மத விரோத செயல்களைக் கண்காணிக்கவும், மதமாற்றத்தைத் தடுக்கவும், கர் வாப்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும் தர்ம யோதாக்களின் குழுக்களையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். ஒரு விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, இது நாட்டின் நீளம் மற்றும் அகலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

நாங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களைச் சமாளிக்க இளைஞர்களின் குழுக்களையும் உருவாக்குவோம். யாத்திரையின் போது நடைபெறும் பொதுக்கூட்டங்களில் சனாதன தர்மம் குறித்து விவாதிக்கப்படும். 

இந்த யாத்திரை என்பது இந்து தர்மத்தை எதிர்ப்பவர்களின் 'இழிவான வடிவமைப்புகளை' பற்றி இந்து சமுதாயத்தை எச்சரிப்பதற்காகவும், 'அத்தகைய சக்திகளை எதிர்த்து போராட அவர்களை தயார்படுத்தவும்' மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வருவதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அயோத்தி கோவிலில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு முன், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் 5 மண் விளக்குகளை சேகரிக்க வி.எச்.பி திட்டமிட்டுள்ளது. இந்த பயண திட்டத்தில் புனிதர்களின் பாதயாத்திரை அடங்கும், அவர்கள் நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று கோயில்களில் மத சொற்பொழிவுகளை வழங்குவார்கள். மக்கள் எவ்வாறு தங்கள் நம்பிக்கைக்காக எழுந்து நிற்க வேண்டும் என்பதையும், மத விரோதிகளின் வடிவமைப்புகளை அறிந்திருக்க வேண்டும் என்பதையும் புனிதர்கள் மக்களுக்கு உணர்த்துவார்கள். 

ஆங்கிலத்தில் படிக்க:- VHP plans shaurya jagran yatra, to raise ‘dharma yoddhas’

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, பொது இடங்களில் பிரம்மாண்டமான எல்.இ.டி திரைகளில் நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்புவது, திறப்பு விழாவின் போது மதச் சடங்குகளை நடத்துவது, நாட்டின் புகழ் பெற்ற குடிமக்களை அயோத்திக்கு அழைப்பது உள்ளிட்ட திட்டத்தை வகுத்து வருகிறோம். ராமர் கோவிலுக்கு நன்கொடை அளித்த 62 கோடி மக்களுடன் மீண்டும் இணைவதே பெரிய திட்டம். 

ராம ஜென்மபூமி இயக்கத்தில் பங்கேற்றவர்கள் அல்லது அதற்குப் பங்களித்தவர்களைக் கவுரவிப்பதற்கான திட்டங்களை வகுப்பதிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. கோவில் கட்டுமானத்திற்காக 'தியாகம்' செய்தவர்கள் சிறப்பாக நினைவுகூரப்படுவார்கள்." என்று விஎச்பி தலைவர்  பன்சால் கூறினார்.

"லவ் ஜிஹாத்" என்பது ஹிந்து பெண்களை திருமணம் செய்யும் முஸ்லீம் ஆண்களுக்கு இந்துத்துவா அமைப்புகளால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். அதே நேரத்தில் "கர் வாப்சி" என்பது மற்ற மதங்களுக்கு மாறிய மக்கள் இந்து மதத்திற்கு திரும்புவதை விவரிக்கும்.

மக்களவை தேர்தல் 2024 கோடையில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த யாத்திரை முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் இது பா.ஜ.க-வுக்கு ஆதரவாக மத ஆர்வத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

India Vishva Hindu Parishad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment