Advertisment

12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான சிறப்புரிமை மீறல் விசாரணை; அழுத்தம் கொடுக்கும் ஜகதீப் தன்கர்

ராஜ்ய சபா தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையே அடிக்கடி ஏற்பட்ட மோதல்களுக்கு பட்ஜெட் கூட்டத் தொடரின் சில நாட்களுக்குப் பிறகு நடவடிக்கை; ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு தனி நோட்டீஸ்

author-image
WebDesk
New Update
12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான சிறப்புரிமை மீறல் விசாரணை; அழுத்தம் கொடுக்கும் ஜகதீப் தன்கர்

ராஜ்ய சபா தலைவர் ஜகதீப் தன்கர் (எக்ஸ்பிரஸ் கோப்பு புகைப்படம்: ரேணுகா பூரி)

ராஜ்யசபாவில் மேலும் குழப்பமான காட்சிகளுக்கு களம் அமைக்கும் வகையில், சமீபத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ​​பலமுறை ஒத்திவைக்கப்படுவதைத் தூண்டும் வகையில், "தொடர்ந்து மற்றும் வேண்டுமென்றே" அவை நடவடிக்கைகளைத் தடை செய்ததற்காக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் மீது சிறப்புரிமையை மீறல் விசாரணையை நடத்துமாறு நாடாளுமன்றக் குழுவை மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

ராஜ்யசபா புல்லட்டின் படி, தலைவர் "உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்ட மொத்த ஒழுங்கீனமான நடத்தை காரணமாக எழும் உரிமை மீறல் தொடர்பான கேள்வியை" ஆய்வு, விசாரணை மற்றும் அறிக்கைக்காக சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைத்துள்ளார்.” எம்.பி.க்களில் 9 பேர் காங்கிரஸையும், 3 பேர் ஆம் ஆத்மி கட்சியையும் சேர்ந்தவர்கள்.

இதையும் படியுங்கள்: நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பி.வி.ஆர் சுப்ரமணியம் நியமனம்

ஜனாதிபதியின் கருத்துக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தொழிலதிபர் கௌதம் அதானிக்கும் இடையே சில தொடர்புகள் இருப்பது உட்பட, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்த பல கருத்துகளை நீக்கும் அவரது முடிவால், சமீபத்திய ராஜ்ய சபா நடவடிக்கைகளின் போது காங்கிரஸுக்கும் ஜக்தீப் தன்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மல்லிகார்ஜூன் கார்கே பின்னர் துணை ஜனாதிபதியான ஜகதீப் தன்கருக்கு கடிதம் எழுதினார், அதில் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள், அதன் கொள்கைகள் மற்றும் அவற்றின் தாக்கத்தை அவையின் கண்ணியத்துடன் ஒப்பிட முடியாது என்று வாதிட்டார்.

விசாரணையை எதிர்கொள்ளும் காங்கிரஸ் எம்.பி.,க்கள் சக்திசிங் கோஹில், நரன்பாய் ஜே ரத்வா, சையத் நசீர் ஹுசைன், குமார் கேட்கர், இம்ரான் பிரதாப்கர்ஹி, எல் ஹனுமந்தையா, பூலோ தேவி நேதம், ஜெபி மாதர் ஹிஷாம் மற்றும் ரஞ்சீத் ரஞ்சன். ஆம் ஆத்மி உறுப்பினர்கள் சஞ்சய் சிங், சுஷில் குமார் குப்தா மற்றும் சந்தீப் குமார் பதக்.

12 எம்.பி.க்கள் ராஜ்யசபாவின் விதிகள் மற்றும் நெறிமுறைகளை மீறி, மீண்டும் மீண்டும் அவையின் மையப் பகுதிக்கு வந்து, முழக்கங்களை எழுப்பி, சபை நடவடிக்கைகளை விடாப்பிடியாகவும், வேண்டுமென்றே தடுத்தும், கவுன்சிலின் கூட்டங்களை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்க தலைவரை நிர்ப்பந்திக்கும் வகையில் செயல்பட்டனர் என ராஜ்யசபா புல்லட்டின் கூறுகிறது.

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் விஷயத்தில், ராஜ்ய சபா தலைவர் இரண்டாவது கேள்வியையும் குழுவிடம் குறிப்பிட்டுள்ளார். அது, ராஜ்ய சபா தலைவரின் வழிகாட்டுதலைப் புறக்கணித்து, அதானி விவகாரத்தில் விவாதம் நடத்த அனைத்து அவை நடவடிக்கைகளையும் இடைநிறுத்தக் கோரி, விதி 267-ன் கீழ் சஞ்சய் சிங் ஒரே மாதிரியான அறிவிப்புகளை சமர்ப்பித்தது தொடர்பானது.

"சஞ்சய் சிங் விதி 267ன் கீழ் ஒரே மாதிரியான அறிவிப்புகளை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்ததற்கு, தலைவர் வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் எழும் சிறப்புரிமை மீறல் தொடர்பான கேள்விக்கும் ஆய்வு, விசாரணை மற்றும் அறிக்கைக்காக சிறப்புரிமைக் குழுவிற்கு ராஜ்யசபா தலைவர் பரிந்துரைத்துள்ளார் என்று உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது,” என்று புல்லட்டின் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Congress Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment