வக்ஃப் சட்டத்திருத்த மசோதா - மாநிலங்களவையிலும் நிறைவேறியது; 128 ஆதரவு, 95 எதிர்ப்பு!

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் 13 மணி நேர விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் 13 மணி நேர விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது.

author-image
WebDesk
New Update
Rijiju

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் 13 மணி நேர விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. அதிகாலை 2.30 மணியளவில் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பிக்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தனர். மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 119 போதும். ஏனென்றால் அவையின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 236 ஆகும். நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படும். அவர் கையெழுத்திட்ட பிறகு மசோதா சட்ட வடிவம் பெறும்.

Advertisment

வக்ஃப் விவகாரத்தில் மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே:

வக்ஃப் திருத்த மசோதா தொடர்பாக பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பா.ஜ.க. அரசைத் தாக்கி, "எதிர்மறையான நிலைப்பாட்டை" எடுத்துள்ளதாகக் கூறினார்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த மசோதா நிறைவேற்றம்- பா.ஜ.க.

Advertisment
Advertisements

மசோதா நிறைவேற்றப்பட்டதை "வரலாற்று சிறப்பு வாய்ந்தது" என்று பா.ஜ.க. குறிப்பிட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பேசவில்லை என்றும், மசோதா குறித்த அவர்களின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்றும் பா.ஜ.க. விமர்சித்தது.

நாடு முழுவதும் விமர்சனங்களைப் பெற்றதா வக்ஃப் மசோதா? 

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைக்குரிய விதிகளில் ஒன்று, முஸ்லிம் அல்லாத ஒருவர் வக்ஃப் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக வர அனுமதிப்பது. இந்த மசோதா, மாநில அரசுகளால் தங்கள் மாநில வக்ஃப் வாரியத்தில் குறைந்தபட்சம் 2 முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்கும் ஒரு விதியையும் அறிமுகப்படுத்தும். மேலும் சர்ச்சைக்குரிய சொத்து வக்ஃப்தானா அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமானதா? என்பதை தீர்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிக்கும். 

மசோதாவில் உள்ள பிற சர்ச்சைக்குரிய விதிகளில், சட்டம் தொடங்கப்பட்ட 6 மாதங்களுக்குள் ஒவ்வொரு வக்ஃப் சொத்தும் ஒரு மைய தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துதல் மற்றும் வக்ஃப் தீர்ப்பாயத்தின் முடிவை இறுதியாக்கிய விதியை நீக்குதல் ஆகியவை அடங்கும்.

இஸ்லாமியர்களை பயமுறுத்தும் எதிர்க்கட்சிகள் - கிரண் ரிஜிஜு

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மூலம் இஸ்லாமிய மக்களை எதிர்க்கட்சிகள் பயமுறுத்துகின்றன என்று மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டினார். மேலும், மத்திய அரசு 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்ற குறிக்கோளுடன் அனைவருக்கும் உழைத்ததாக வலியுறுத்தினார். மாநிலங்களவையில் வக்ஃப் (திருத்தம்) மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற ரிஜிஜு, வக்ஃப் வாரியம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு என்றும், அனைத்து அரசு அமைப்புகளைப் போலவே, அது மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத சிலரைச் சேர்ப்பது அமைப்பின் முடிவுகளை மாற்றாது, மாறாக மதிப்பு கூட்டலை வழங்கும் என்று அவர் கூறினார். 

மாநிலங்களவை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு:

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்த சட்டப்பூர்வ தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் மாநிலங்களவையில் விவாதித்தபோது, ​​எதிர்க்கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசை கடுமையாக சாடி, பிரதமர் மோடி ஏன் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை இன்றுவரை பார்வையிடவில்லை என்று கேட்டு கூச்சலிட்டன. இதனால், மாநிலங்களவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

waqf board bill

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: