வக்பு விவாதத்தில் ராகுல், பிரியங்கா ஏன் இல்லை? மலையாள நாளிதழ் கேள்வி

நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதா குறித்து பேசாமல் இருக்க ராகுல் எடுத்த முடிவும், அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வத்ரா விவாதத்தின் போது அவையில் இல்லாததும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதா குறித்து பேசாமல் இருக்க ராகுல் எடுத்த முடிவும், அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வத்ரா விவாதத்தின் போது அவையில் இல்லாததும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

author-image
WebDesk
New Update
Waqf debate No Rahul Priyanka in House Congress PM Modi Tamil News

நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதா குறித்து பேசாமல் இருக்க ராகுல் எடுத்த முடிவும், அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வத்ரா விவாதத்தின் போது அவையில் இல்லாததும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது வக்பு திருத்த மசோதா. இந்நிலையில், இந்த மசோதா கடந்த புதன்கிழமை மக்களவையில் விவாதிக்கப்பட்டபோது, ​​எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த மசோதா குறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல், இந்த மசோதா  "முஸ்லிம்களை ஓரங்கட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம்" என்று தனது சமூக வலைதள  பக்கத்தில் மட்டும் பதிவிட்டு இருந்தார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: No Rahul in Waqf debate, no Priyanka in House, Congress says ‘immaterial’, ‘Was PM there?’

நேற்று வியாழக்கிழமை இந்த மசோதா மாநிலங்களவைக்கு வந்தபோது, ​​அவையில் காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றி, மத்திய அரசை கடுமையாக சாடினார். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த மசோதா குறித்து பேசாமல் இருக்க ராகுல் எடுத்த முடிவும், அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி வத்ரா விவாதத்தின் போது அவையில் இல்லாததும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. 

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அங்கீகரிப்பது குறித்த விவாதத்திற்கும் இருவரும் வரவில்லை. இதேபோல், நேற்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் வக்பு மசோதா மீது வாக்களித்த உடனேயே ராகுல் வெளியேறினார். அந்த நேரத்தில் மணிப்பூர் விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசு எடுத்த முடிவால் எதிர்க்கட்சிகள் ஆச்சரியமடைந்தன.

Advertisment
Advertisements

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை, ஐ.யு.எம்.எல்-சார்பு சமஸ்தா கேரள ஜெம்-இய்யத்துல் உலமாவால் கட்டுப்படுத்தப்படும் மலையாள நாளிதழான சுப்ரபாதம், ராகுல் வக்பு திருத்த மசோதா விவாதத்தின் போது ஏன் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், கேரளாவைச் சேர்ந்த எம்.பி.யான பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்தில் இல்லாததை "ஒரு களங்கம்" என்று குறிப்பிட்டுள்ளது.ஐ.யு.எம்.எல் கட்சி கேரளாவில் காங்கிரஸின் கூட்டணியில் இருக்கிறது  என்பது நினைவுகூரத்தக்கது. 

இதுதொடர்பாக சுப்ரபாதம் நாளிதழ் அதன் கட்டுரையில், "பாபர் சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம்கள் மற்றும் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிராக சங்க பரிவாரங்கள் தொடுத்த மிகப்பெரிய தாக்குதல்களில் வக்பு  மசோதாவும் ஒன்று. இருப்பினும், நாடு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் எதிர்பார்க்கும் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, கட்சியின் கொறடாவின் உத்தரவு இருந்தபோதிலும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. அது ஒரு களங்கமாகவே இருக்கும். மசோதா விவாதிக்கப்பட்டபோது அவர் எங்கே இருந்தார் என்ற கேள்வி என்றென்றும் இருக்கும். மேலும், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் மசோதா குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை என்ற கேள்வியும் அப்படியே இருக்கும்," என்று கூறியிருக்கிறது. 

பிரியங்கா காந்தி வத்ராவைப் பொறுத்தவரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள உறவினருடன் தங்குவதற்காக அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவர் சபையில் கலந்து கொள்ள இயலாமை குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக்குத் தனித்தனியாகத் தெரிவித்ததாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் மற்றும் சி.பி.ஐ(எம்) கட்சிகள் கேரளாவில் முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் போட்டியிட்டு வரும் நிலையில், “எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை எங்கள் உறுப்பினர்கள் வலுவாக முன்வைத்தனர். நாங்கள் முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் சீக்கிய உறுப்பினர்களை நிறுத்தினோம். முக்கியமான மசோதா வரும் ஒவ்வொரு முறையும் ராகுல் பேசுவார் என்பதல்ல.” என்று மற்றொரு காங்கிரஸ் கூறினார்: 

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவாதத்திற்கு ராகுல் வராதது குறித்து, காங்கிரஸ் எம்.பி ஒருவர் பேசுகையில், “அவர் மாநிலத்திற்குச் சென்று முகாம்களில் வசிப்பவர்களைச் சந்தித்தார், மணிப்பூர் பற்றி வலுவாகப் பேசி வருகிறார். நாடாளுமன்றத்தில் மாநிலம் குறித்த விவாதத்தில் ராகுல் பங்கேற்கவில்லை. அப்படியென்றால் அவர் தனது நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்துவிட்டாரா?” என்று கேள்வி எழுப்பினார். 

காங்கிரஸ் கட்சியின் கூட்டுக் கருத்து முக்கியமானது என்றும், “மேலும், மசோதாக்கள் குறித்த விவாதத்தில் ராகுல் அரிதாகவே பங்கேற்பார்.” என்றும் இன்னொரு காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.  

உண்மையில், கடந்த 11 ஆண்டுகளில், மூத்த காங்கிரஸ் தலைவரான ராகுல் இரண்டு முறை மட்டுமே மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 2023 இல் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, மற்றும் 2015 இல் நிலம் கையகப்படுத்துதல் மசோதா என்று பிரபலமாக அறியப்படும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (திருத்தம்) மசோதாவில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமையைக் கோரி பேசினார். 

கடந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக ஆனதிலிருந்து, ராகுல் மொத்தம் ஏழு விவாதங்களில் பங்கேற்றுள்ளார் - ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரண்டு முறை, பட்ஜெட்டில் ஒரு முறை மற்றும் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 ஆண்டுகளைக் குறிக்கும் விவாதத்தில் ஒரு முறை என அவர் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு துயரம் குறித்து அவர் இரண்டு சிறப்பு குறிப்புகளையும், சமர்ப்பிப்பையும் செய்துள்ளார்.

வக்பு திருத்த மசோதா குறித்து தனது கருத்தில், ராகுல் அதை "முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும் அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளை அபகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம்" என்று குறிப்பிட்டார். மேலும், "ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க மற்றும் அவர்களது கூட்டாளிகளால் அரசியலமைப்பின் மீதான இந்தத் தாக்குதல் இன்றைய முஸ்லிம்களை இலக்காகக் கொண்டது, ஆனால் எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கு ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது, ஏனெனில் இது இந்தியாவின் கருத்தையே தாக்குகிறது மற்றும் பிரிவு 25, மத சுதந்திர உரிமையை மீறுகிறது." என்றும் அவர் கூறினார். 

நேற்று வியாழக்கிழமை சோனியா காந்தி தனது அறிக்கையில், "வக்பு மசோதா உண்மையில் புல்டோசர் மூலம் நிறைவேற்றப்பட்டது. எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இந்த மசோதா அரசியலமைப்பின் மீதான ஒரு வெட்கக்கேடான தாக்குதல். நமது சமூகத்தை நிரந்தர துருவமுனைப்பு நிலையில் வைத்திருக்க பாஜக திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாகும்." என்று கூறினார். 

ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட  தலைவர்களை விமர்சிக்கும் அதே வேளையில், சமஸ்தா தலையங்கம், "நள்ளிரவுக்குப் பிறகு நாடாளுமன்ற நிகழ்வில் மசோதாவுக்கு எதிராக வீரத்துடன் போராடி அதற்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர்களை" பாராட்டியது.

 

Pm Modi Congress Priyanka Gandhi Rahul Gandhi waqf board bill

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: