Advertisment

'இதுபோன்ற ஒரு அவலத்தை எதிர்பார்க்கவில்லை': ஒரே இரவில் சேற்றில் புதைந்த வயநாடு கிராமம்

செவ்வாய்கிழமை அதிகாலையில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. விடிவதற்குள் கிராமம் முற்றிலும் மாறிவிட்டது.

author-image
WebDesk
New Update
Wayanad landslide death

Wayanad landslide

கிட்டத்தட்ட சூரல்மாலா கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் கடைகளும் சேற்றில் புதைந்துள்ளன. உருக்குலைந்த கார்களும், இரு சக்கர வாகனங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

Advertisment

செவ்வாய்கிழமை அதிகாலையில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்தின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. விடிவதற்குள் கிராமம் முற்றிலும் மாறிவிட்டது.

சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள முண்டக்கை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், சூரல்மலையில் சேறும், சகதியும் சேர்ந்தது மட்டுமின்றி, எருவழஞ்சி ஆறும் போக்கை மாற்றி கிராமத்தின் நடுவே ஓடியது.

ஒரு தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பு உட்பட அதன் புதிய பாதையில் உள்ள அனைத்தையும் வெள்ளம் அடித்துச் சென்றது. மேலும் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெரும் பகுதிகளையும் அழித்தது.

Wayanad landslide

சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களைக் காணவில்லை, மாணவர்களின் இருப்பிடம் குறித்து பெற்றோருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன், என்று பள்ளியின் முதல்வர் கூறினார்.

முண்டக்கை செல்ல முயன்ற மீட்புப் பணியாளர்கள், சூரல்மாலாவை இணைக்கும் பாலம் நிலச்சரிவில் இடிந்ததால் மணிக்கணக்கில் சிக்கித் தவித்தனர்.

சூரல்மலை கிராமத்தை சேர்ந்த அலிகோயா கூறுகையில், இது மண்சரிவு அபாயம் இல்லாத பகுதி என்பதால் இதுபோன்ற ஒரு அவலத்தை தான் எதிர்பார்க்கவில்லை, என்றார்.

மலப்புரம் மாவட்டத்தின் நிலம்பூர் பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவில் பல சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், கிராமத்தைச் சேர்ந்த பலர் அடித்துச் செல்லப்பட்டனர்.

செவ்வாய்கிழமை நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமை முண்டக்கை மலையில் மிகச்சிறிய நிலச்சரிவால், மக்கள் பாதுகாப்பாக இருக்க சூரல்மாலாவில் உள்ள பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டது. திங்கள்கிழமை வரை தொடர்ந்து மழை பெய்ததால், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர், இதனால் செவ்வாய்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பேரழிவில் இருந்து தப்பினர்.

முண்டக்கை நிலச்சரிவில் உறவினர்கள் 5 பேரை இழந்து தவிக்கும் டோலி என்ற பெண், முண்டக்கை பகுதியில் இருந்து அதிகளவிலான மக்களை அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றியிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.

திங்கட்கிழமை காலையிலேயே நானும் என் கணவர் ஜோஸும் சுல்தான் பத்தேரி நகருக்குச் சென்றோம். இல்லையெனில், நாங்களும் இடிபாடுகளில் சிக்கி இறந்திருப்போம், என்றார்.

Read in English: Everything buried in mud, this Wayanad village turned into a ghost town overnight

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Wayanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment