Advertisment

'இப்போது அங்கே ஒரு ஆன்மா கூட இல்லை': மீட்புப் படையினருக்கு சவாலாக அமைந்த வயநாடு கிராமம்

உயிர் பிழைத்தவர்கள் கடினமான மீட்புப் பணிக்குப் பிறகு வெளியே மீட்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
wayanad landslides,

‘There is not a soul left’: At landslide Ground Zero in Wayanad, massive rescue ops on

கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

பலி எண்ணிக்கை 250ஐ தாண்டி விட்டது.

Advertisment

உயிர் பிழைத்தவர்கள் கடினமான மீட்புப் பணிக்குப் பிறகு வெளியே மீட்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள முண்டக்கை கிராமம்தான் மீட்புப் படையினருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

ஒரு காலத்தில் ரிசார்ட்டுகள், ஹோம்ஸ்டேஸ் மற்றும் காபி தோட்டங்கள் நிறைந்த மேப்பாடி பஞ்சாயத்தின் ஒரு பகுதியான முழு கிராமமும் இப்போது சேறும் சகதியுமாக மாறிவிட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், மசூதி, ஒரு தபால் அலுவலகம், ஒரு ரிசார்ட் மற்றும் பல கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இருவழஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், கிராமம் 2 கிமீ தொலைவில் உள்ள சூரல்மாலா சந்திப்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. 

செவ்வாய் மாலையில்தான் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு கிராமத்தை அடைந்தது.

புதன்கிழமை மீட்பு பணிகள் தொடங்கியது, மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், கொச்சியில் இருந்து 55 பேர் கொண்ட ஸ்கூபா டைவிங் குழு, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு பணியாளர்கள் கிராமத்தை அடைந்து உடல்களை மீட்கத் தொடங்கினர். புதன்கிழமை, குழு 10 உடல்களை கண்டுபிடித்தது.

இருவாழஞ்சி ஆற்றில் இடுப்பளவு சுழலும் நீரில் நின்றபடி ராணுவ வீரர்கள் கயிற்றைப் பயன்படுத்தி மனிதச் சங்கிலியை உருவாக்கி முண்டைக்கை பகுதியில் சிக்கித் தவித்தவர்களை மீட்டனர். 

முண்டக்கை ஊராட்சி உறுப்பினர் கே.பாபு கூறுகையில், "கிராமத்தில் சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர். இப்போது அங்கே ஒரு ஆத்மாவும் இல்லை, பேரழிவில் இருந்து தப்பிய அனைவரையும் நாங்கள் மீட்டோம். முண்டக்கையில் காபி எஸ்டேட் தொழிலாளர்களின் குடியிருப்புகள் உட்பட 540 வீடுகள் இருந்தன, அவற்றில் 50க்கும் குறைவாகவே தற்போது உள்ளன”, என்றார்.

நிலச்சரிவுக்குப் பிறகு முண்டக்கை கிராமத்தை முதலில் அடைந்தவர்களில் ஒருவரான மேப்பாடியில் உள்ள கொட்டாநாடு கிராமத்தில் வசிக்கும் பாபு, இன்னும் பலரைக் காணவில்லை, எனவே முண்டக்கையில் எத்தனை பேர் இறந்தனர் என்பதை எங்களால் சொல்ல முடியாது. நிலச்சரிவில் பல உடல்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். நிவாரண முகாம்களுக்குச் சென்று உயிர் பிழைத்த முண்டக்காய் பகுதியைச் சேர்ந்தவர்களின் விவரங்களைப் பெறுமாறு ஆஷா பணியாளர்களிடம் பஞ்சாயத்து கூறியுள்ளது, என்றார்.

புதன்கிழமை பெய்த கனமழையால் இருவாழஞ்சி ஆற்றின் மீது அமைக்கப்பட்ட தற்காலிக, குறுகிய நடைபாதை நீரில் மூழ்கியது. மாலை 6 மணியளவில், மீட்புப் பணியாளர்கள் அதே நடைபாதையைப் பயன்படுத்தி கயிறுகளால் தங்களைத் தாங்களே இழுத்து முண்டக்கையிலிருந்து திரும்பியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன

Read in English: ‘There is not a soul left’: At landslide Ground Zero in Wayanad, massive rescue ops on

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Wayanad
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment