Advertisment

கடந்த 5 ஆண்டுகள் ‘சீர்திருத்தம், செயல்திறன், மாற்றத்தின்’ காலகட்டம்; 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தில் மோடி உரை

17வது மக்களவையில் 97 சதவீத உற்பத்தி திறன் பதிவாகியுள்ளது; 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தில் மோடி உரை

author-image
WebDesk
New Update
modi

17வது மக்களவையில் 97 சதவீத உற்பத்தி திறன் பதிவாகியுள்ளது; 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தில் மோடி உரை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

17வது லோக்சபா கூட்டத்தொடரின் கடைசி அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஐந்தாண்டுகள் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின்காலகட்டமாக இருந்தது என்றும், இந்தியா பெரிய மாற்றங்களைநோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகவும் கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: We have seen ‘reform, perform, transform’ in five years: PM Modi addresses last sitting of 17th Lok Sabha

"நாம் சீர்திருத்தம் செய்வது, செயல்படுவது மற்றும் மாற்றத்தைக் கண்து அரிது. 17வது லோக்சபாவை நாடு ஆசீர்வதிக்கும்,'' என்று மோடி கூறினார்.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன் நடந்த இறுதி அமர்வில் அனைத்து எம்.பி.க்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். "நாடு விரைவான வேகத்தில் பெரிய மாற்றங்களை நோக்கி நகர்ந்துள்ளது மற்றும் சபையின் அனைத்து உறுப்பினர்களும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக மக்கள் காத்திருந்த இத்தகைய பணிகள் நிறைவடைந்துள்ளன,” என்று மோடி கூறினார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த ஜி20 உச்சிமாநாடு, 370வது பிரிவை ரத்து செய்தல் மற்றும் தரவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல "முக்கிய மைல்கற்களை" பிரதமர் மோடி எடுத்துரைத்தார். "பல சவால்களை எதிர்கொண்டோம் மற்றும் நாட்டுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது" என்று மோடி கூறினார்.

பல தலைமுறைகளாக, மக்கள் ஒரே அரசியலமைப்பைக் கனவு கண்டனர், ஆனால் இந்த அவை 370 வது பிரிவை நீக்குவதன் மூலம் அதை சாத்தியமாக்கியது, மேலும் 17வது மக்களவையின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என்று மோடி கூறினார். பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதையும், உடனடி முத்தலாக்கை குற்றமாக்கும் சட்டத்தை நிறைவேற்றியதையும் மோடி பாராட்டினார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். என்ன நடந்தாலும் உங்கள் முகத்தில் (பிர்லா) எப்போதும் புன்னகை இருக்கும். நீங்கள் இந்த சபையை நடுநிலையோடு வழிநடத்தினீர்கள் அதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன். கோபம் மற்றும் குற்றச்சாட்டுகள் இருந்தன, ஆனால் நீங்கள் இந்த சூழ்நிலைகளை பொறுமையுடன் கையாண்டீர்கள், புத்திசாலித்தனமாக அவை நடத்துனீர்கள்,” என்று ஓம் பிர்லாவை மோடி பாராட்டினார்.

பிரதமர் மோடி தனது உரையின் போது, ​​கோவிட் -19 தொற்றுநோய் இந்த காலகட்டத்தில் காணப்பட்ட "நூற்றாண்டின் மிகப்பெரிய நெருக்கடி" என்று குறிப்பிட்டார். சபையின் கண்ணியத்தை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்ற பணிகள் தடைபடாத வகையில் ஏற்பாடுகளை செய்த சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.

இந்த காலக்கட்டத்தில் திறக்கப்பட்ட புதிய பார்லிமென்ட் கட்டிடம் குறித்து பேசிய மோடி, “முந்தைய காலங்களில் புதிய கட்டிடம் தேவை என்று பேசப்பட்டது, ஆனால் சபாநாயகரின் முடிவு 17வது லோக்சபாவின் போது இதை நிஜமாக்கியதுஎன்று மோடி கூறினார்.

17வது மக்களவையில் 97 சதவீத உற்பத்தி திறன் பதிவாகியுள்ளதாக பிரதமர் கூறினார். 17வது லோக்சபாவின் முடிவை நோக்கி நகர்கிறோம், 18வது லோக்சபாவில் உற்பத்தித்திறன் 100 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளோம்,” என்று மோடி கூறினார்.

கூடுதல் தகவல்கள்: PTI

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pm Modi Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment