scorecardresearch

கல்வியை காவிமயமாக்குவதில் என்ன தவறு? – வெங்கையா நாயுடு

மெக்காலே கல்வியை நிராகரிக்க வேண்டும்; கல்வியை காவிமயமாக்குவதில் என்ன தவறு – வெங்கையா நாயுடு கேள்வி

கல்வியை காவிமயமாக்குவதில் என்ன தவறு? – வெங்கையா நாயுடு

Naidu calls for rejecting Macaulay’s education, asks what is wrong with saffron: கல்வியை காவிமயமாக்குவதாக அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்படுகிறது, ஆனால் “காவி நிறத்தில் என்ன தவறு” என்று சனிக்கிழமையன்று துணை ஜனாதிபதி எம் வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாட்டிலிருந்து மெக்காலே கல்வி முறையை முற்றிலுமாக நிராகரிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியர்கள் தங்கள் “காலனித்துவ மனநிலையை” கைவிட்டு, தங்கள் இந்திய அடையாளத்தில் பெருமிதம் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவ் சமஸ்கிருதி விஸ்வ வித்யாலயாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறுவனத்தைத் திறந்து வைத்த துணை குடியரசுத் தலைவர் தனது உரையில் கூறினார்.

கல்வி முறையை இந்தியமயமாக்குவது இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் மையமாகும், இது தாய்மொழிகளை மேம்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.

“கல்வியை காவி நிறமாக்குவதாக நாங்கள் குற்றம் சாட்டப்படுகிறோம், ஆனால் காவியில் என்ன தவறு” என்று அவர் கேட்டார்.

சுதந்திரத்தின் 75 வது ஆண்டில் மெக்காலே கல்வி முறையை நிராகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த வெங்கையா நாயுடு, அது நாட்டில் வெளிநாட்டு மொழியை பயிற்று மொழியாக திணித்து, உயர்தட்டு மக்களுக்கு மட்டுமே கல்வியை கிடைக்க செய்தது என்றார்.

“பல நூற்றாண்டு காலனிய ஆட்சி நம்மை ஒரு தாழ்ந்த இனமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தது. நமது சொந்த கலாச்சாரத்தை, பாரம்பரிய ஞானத்தை இழிவுபடுத்த கற்றுக்கொடுக்கப்பட்டோம். இது ஒரு தேசமாக நமது வளர்ச்சியைக் குறைத்தது. அந்நிய மொழியை நமது பயிற்று மொழியாக திணித்ததன் மூலம் கல்வியை சமூகத்தின் ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே ஒதுக்கி, பெரும் எண்ணிக்கையிலான மக்களின் கல்வி உரிமையை பறித்தது,” என்றார்.

தாமஸ் பாபிங்டன் மெக்காலே ஒரு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் ஆவார், அவர் இந்தியாவில் கல்விக்கான பயிற்றுவிக்கும் ஊடகமாக ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு வகித்தார்.

“நமது பாரம்பரியம், கலாச்சாரம், முன்னோர்கள் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும். நாம் நமது வேர்களுக்குத் திரும்ப வேண்டும். நாம் நமது காலனித்துவ மனப்பான்மையை கைவிட்டு, நம் குழந்தைகளுக்கு அவர்களின் இந்திய அடையாளத்தில் பெருமிதம் கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும். முடிந்தவரை இந்திய மொழிகளைக் கற்க வேண்டும். நாம் நம் தாய்மொழியை நேசிக்க வேண்டும். அறிவுப் பொக்கிஷமாக விளங்கும் நமது வேதங்களை அறிய சமஸ்கிருதத்தைக் கற்க வேண்டும்” என்று வெங்கையா நாயுடு கூறினார்.

இளைஞர்கள் தங்கள் தாய்மொழியைப் பிரச்சாரம் செய்ய ஊக்குவித்த அவர், “அனைத்து கேஜெட் அறிவிப்புகளும் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியில் வெளியிடப்படும் நாளை எதிர்நோக்குகிறேன். உங்கள் தாய்மொழி உங்கள் கண்பார்வை போன்றது, அதேசமயம் வெளிநாட்டு மொழியைப் பற்றிய உங்கள் அறிவு உங்கள் கண்ணாடியைப் போன்றது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுப் பிரமுகர்கள், தங்கள் சொந்த மொழியில் பெருமை கொள்வதால், ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், தாய்மொழியில் பேசுகின்றனர்.

இதையும் படியுங்கள்: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பான் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் – மோடி

“சர்வே பவந்து சுகினா (அனைவரும் மகிழ்ச்சியாக இருங்கள்) மற்றும் வசுதைவ் குடும்பம் (உலகம் ஒரே குடும்பம்) ஆகியவை நமது பண்டைய நூல்களில் உள்ள தத்துவங்கள், இன்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் வழிகாட்டும் கொள்கைகளாக உள்ளன” என்று நாயுடு கூறினார்.

“பொதுவான வேர்களைக் கொண்ட கிட்டத்தட்ட அனைத்து தெற்காசிய நாடுகளுடனும் இந்தியா வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. சிந்து சமவெளி நாகரீகம் ஆப்கானிஸ்தானில் இருந்து கங்கை சமவெளி வரை பரவியிருந்தது. எந்த நாட்டையும் முதலில் தாக்கக்கூடாது என்ற நமது கொள்கை உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. வன்முறையை விட அகிம்சையையும் அமைதியையும் தேர்ந்தெடுத்த மாவீரன் அசோகனின் நாடு இது.

“ஒரு காலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் நாளந்தா மற்றும் தக்ஷிலா போன்ற பண்டைய இந்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்க வந்தனர், ஆனால் அதன் செழிப்பின் உச்சத்தில் கூட, இந்தியா எந்த நாட்டையும் தாக்க நினைத்ததில்லை, ஏனென்றால் உலகிற்கு அமைதி தேவை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். “என்று வெங்கையா நாயுடு கூறினார்.

கல்வியைத் தவிர, இயற்கையோடு நெருங்கிப் பழகவும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். “இயற்கை ஒரு நல்ல ஆசிரியர். கொரோனா நெருக்கடியின் போது இயற்கையுடன் நெருக்கமாக வாழும் மக்கள் குறைவாகவே பாதிக்கப்படுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். சிறந்த எதிர்காலத்திற்காக இயற்கையும் கலாச்சாரமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள். என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: We must give up colonial mindset take pride in indian identity venkaiah naidu