Advertisment

கேரளாவின் பலவீனமான லோக் ஆயுக்தா; எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

சிபிஎம் தலைவரும், கேரள சட்ட அமைச்சருமான பி.ராஜீவ், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் முதல்வரைக்கூட கொண்டுவரவில்லை என்று வாதிட்டு மாற்றங்களை ஆதரித்தார்.

author-image
WebDesk
New Update
கேரளாவின் பலவீனமான லோக் ஆயுக்தா; எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

ஊழல் வழக்குகளை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவின் அதிகாரங்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் உறுதிசெய்த சில நாட்களுக்குப் பிறகு, மாநில அரசுக்கு ஒரு கட்டுப்படும் வகையில், கேரள சட்டசபை செவ்வாய்க்கிழமை லோக் ஆயுக்தா அமைப்பு அதிகாரத்தை பெரும்பகுதி குறைத்து லோக் ஆயுக்தா திருத்த மசோதா 2022 ஐ நிறைவேற்றியது.

Advertisment

இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒரு அவசரச் சட்டத்திற்கு பதிலாக ஆளுநர் ஆரிப் முகமது கான் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

மாற்றங்கள்:

உரிய அதிகாரம் அளித்தல்

அப்போதைய எல்.டி.எஃப் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட கேரள லோக் ஆயுக்தா சட்டம், 1999, லோக் ஆயுக்தா அல்லது உபா லோக் ஆயுக்தா ஊழல் குற்றவாளிகள் என்று அறிக்கை சமர்ப்பித்தால், அரசு ஊழியர் (முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உட்பட) அவர்களின் பதவியைக் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இந்த அறிக்கைக்கு அரசாங்கம் கட்டுப்பட்டு, ஊழல் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டதை ஏற்று, 90 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அறிக்கையை லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிப்பதற்கு (கவர்னர், அரசு அல்லது முதல்வர், குற்றம் சாட்டப்பட்ட தரப்பினரைப் பொறுத்து). போதுமான அதிகாரம் தேவைப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின்படி, லோக் ஆயுக்தா அல்லது உபா லோக்ஆயுக்தா இப்போது தகுதிவாய்ந்த அதிகாரியிடம் பரிந்துரையை மட்டுமே செய்ய முடியும், பின்னர், அதை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆளுநர் இனி திறமையான அதிகாரிகளில் ஒருவரல்ல, முதல்வர் குற்றம் சாட்டப்பட்டால் ஆளுநருக்கு பதிலாக சட்டப் பேரவை பொறுப்பேற்கும். கேபினட் அமைச்சர்களைப் பொறுத்தவரை, நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் முதல்வருக்கும் எம்எல்ஏக்களுக்கு சபாநாயகருக்கும் உள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி, ஒரு முதல்வருக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டையும் நிராகரிக்கக் கூடும்.

காலக்கெடு

மற்றொரு மாற்றத்தில், எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கான காரணங்கள் உட்பட, 90 நாட்களுக்குள் லோக் ஆயுக்தா அல்லது உபா லோக் ஆயுக்தாவிடம் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்பிக்க உரிய அதிகாரத்தைக் கோரினாலும் சம்பந்தப்பட்ட அதிகாரமாக சட்டமன்றமாக இருப்பதால் முதல்வர் விஷயத்தில் அது நிற்காது.

வாய்ப்பு

1999 ஆம் ஆண்டு சட்டம் அரசியல் கட்சிகளின் மாநில அளவிலான பொறுப்பாளர்கள் மீதான புகார்களை விசாரிக்கும் விதிகளைக் கொண்டிருந்தது. ஊழல் தடுப்பு விசாரணை அமைப்புகளால் விசாரிக்கப்படும் விஷயங்களில் இருந்து அரசியல் தலைவர்களை இந்த திருத்தம் தவிர்க்கிறது.

நியமனம்

லோக் ஆயுக்தா உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியாகவோ இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இப்போது, திருத்தத்தின் மூலம், ​​லோக் ஆயுக்தா பதவிக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியையும் பரிசீலனை செய்யலாம்.

உபா லோக் ஆயுக்தாவைப் பொறுத்தவரை, ஓய்வு பெற்ற அல்லது பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. ஆனால், திருத்தத்தின்படி, இப்போது பதவியில் இருக்கும் நீதிபதியை கருத்தில் கொள்ள தேவையில்லை.

அலுவலக விதிமுறைகள்

லோக் ஆயுக்தா அல்லது உப லோக் ஆயுக்தா தலைவராக பதவியேற்ற நாளிலிருந்து ஐந்தாண்டுகள் பதவிக்காலம் என்று சட்டம் நிர்ணயித்துள்ளது. ஆனால் இப்போது, அவர்கள் 70 வயது வரை பதவியில் தொடரலாம் என்று சட்டத் திருத்தம் கூறுகிறது.

காலி இடக்களுக்கான விதிகள்

பதவியில் இருப்பவர் மரணம் அடைந்தாலோ, ராஜினாமா செய்தாலோ அல்லது வேறு காரணங்களால் லோக் ஆயுக்தா அலுவலகம் காலியாக இருந்தால், புதியவரை நியமிக்கும் வரை, மூத்த உப லோக் ஆயுக்தாவை ஒன்றாகச் செயல்பட ஆளுநர் அங்கீகரிக்கலாம் என்ற விதியை இந்தத் திருத்தம் கொண்டு வருகிறது.

தவிர, லோக் ஆயுக்தா இல்லாததால், விடுப்பு அல்லது வேறு காரணங்களால் தனது பணிகளைச் செய்ய முடியாமல் போகும் போது, ஆளுநர், மூத்த-உப லோக் ஆயுக்தா செயல்பாடுகளை நிறைவேற்ற அதிகாரம் அளிக்கலாம்.

வாதம்

சிபிஎம் தலைவரும், கேரள சட்ட அமைச்சருமான பி.ராஜீவ், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்கள் லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் முதல்வரைக்கூட கொண்டுவரவில்லை என்று வாதிட்டு மாற்றங்களை ஆதரித்தார். “லோக் ஆயுக்தாவுக்கு விசாரிக்கும் பொறுப்பு மட்டுமே உள்ளது. அதற்கு நீதித்துறை அதிகாரம் இல்லை. தற்போதுள்ள கேரள லோக் ஆயுக்தா அரசியலமைப்பு மற்றும் சட்ட அமைப்புகளுக்கு எதிரானது. தற்போதுள்ள சட்டத்தில், லோக் ஆயுக்தா விசாரணை அமைப்பின் பங்கையும், நீதித்துறை அமைப்பின் பங்கையும் கொண்டுள்ளது. அதில் திருத்தம் செய்ததன் மூலம், கடந்த 23 ஆண்டுகளாக நிலவி வந்த தவறை சரி செய்துள்ளோம்” என்று கூறினார்.

லோக் ஆயுக்தாவை அரசு பலவீனப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசன், “முதலமைச்சருக்கு எதிரான லோக் ஆயுக்தா அறிக்கையின் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை சட்டப்பேரவைக்கு மாற்றியதன் மூலம் அதிகார அத்துமீறல் நடைபெறுகிறது. ஒரு அரை-நீதித்துறை அமைப்பின் பரிந்துரையின் பேரில் நிர்வாகி எவ்வாறு முடிவெடுக்க முடியும்? சட்டமன்றம் மற்றும் நீதித்துறையின் தீர்ப்புகள் மூலம் இயற்றப்படும் சட்டத்தை செயல்படுத்துவதே நிர்வாகத்தின் பணி. இந்த திருத்தம் அரசியலமைப்புக்கு எதிரானது” என்று கூறினார்.

லோக் ஆயுக்தாவின் முன் உள்ள வழக்குகள்

கடந்த எல்.டி.எப் ஆட்சியின் போது முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உதவிகளை விடுவிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக ஐந்து வழக்குகள் ஆணையத்தின் முன் நிலுவையில் உள்ளன. ஆர்.எஸ். சசிகுமார் என்ற சமூக ஆர்வலர், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது முந்தைய அமைச்சரவை மீது புகார் அளித்திருந்தார். அந்த காலகட்டத்தில், லோக் ஆயுக்தாவின் தீர்ப்பைத் தொடர்ந்து, அப்போதைய உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் ரத்த சொந்தங்களுக்கு சலுகை அளித்த குற்றச்சாட்டில் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Cpm Lok Ayukta
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment