scorecardresearch

பிரிஜ் பூஷண் பாலியல் வழக்கு; புகார்தாரர்களுக்கு பாதுகாப்பு- வழக்கு முடித்துவைப்பு

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் 2 எஃப்ஐஆர் பதிவு செய்ததையடுத்து இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Tamil News
Tamil News Updates

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பெண் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரணையை முடித்து வைத்தது.
பாஜக எம்பி பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீசார் 2 எஃப்ஐஆர் பதிவு செய்ததையடுத்து இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

மேலும், இந்திய தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் பி எஸ் நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை ஏற்கவில்லை.
தொடர்ந்து, வழிகாட்டுதல்கள் தேவை என்று கருதினால், மனுதாரர்கள் அதிகார வரம்புக்குட்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அல்லது டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு அணுக சுதந்திரம் உள்ளது எனவும் நீதிபதி கூறினார்.

மனுதாரர் வழக்கறிஞர் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் சமர்ப்பிப்புகளை கேட்ட பின்னர், அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 28, 2023 அன்று, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) சட்டத்தின் கீழ் கூறப்படும் குற்றங்களுக்காக இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி, “எப்ஐஆர் பதிவுக்காக இங்கு மனு தாக்கல் செய்யப்பட்டதாக பதிவு செய்துள்ளோம்.
அந்த மனுவின் நோக்கம் நிறைவேறிவிட்டது. இது கண்காணிக்கப்படத் தகுதியற்றது என்று நாங்கள் கூறவில்லை.

நீங்கள் எங்களிடம் வந்ததை நாங்கள் பிரார்த்தனைக்கு மட்டுப்படுத்திக் கொண்டோம், இது ஒரு எஃப்ஐஆர் பதிவு. அது நிறைவேறிய பிறகு, நாங்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, உயர்நீதிமன்றத்தை மாற்ற உங்களுக்கு சுதந்திரம் உள்ளது என்று கூறியுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து, “மாஜிஸ்திரேட்டின் ஏதேனும் உத்தரவால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது கூடுதல் வழிகாட்டுதல்கள் தேவை என்று நீங்கள் உணர்ந்தால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடவும். அவர்கள் இப்போது எங்கள் ஆர்டரைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பார்கள்” எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுடெல்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த 11 நாள்களாக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Wfi sexual harassment supreme court closes case after noting fir registered against wfi chief security provided to complainants

Best of Express