/tamil-ie/media/media_files/uploads/2022/11/soumya-swaminathan-1.jpeg)
WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்
உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் ஐந்தாண்டு பணிக்குப் பிறகு நவம்பர் 30 அன்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளார்.
WHO இன் கட்டாய ஓய்வூதிய வயதை விட இரண்டு ஆண்டுகள் குறைவாக உள்ள சௌமியா சுவாமிநாதன் (63), தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், "அதிக நடைமுறைப் பணிகளைச் செய்ய வேண்டும்" என்றும் இந்தியாவில் வாழவும் வேலை செய்யவும் விரும்புவதாகவும் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “முக்கிய காரணம் என்னவென்றால், உலக அளவில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆராய்ச்சி மற்றும் கொள்கையில் நடைமுறைப் பணிகளுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஒரு தூண்டுதலை நான் உணர்கிறேன்.
WHO வில் நாங்கள் ஊக்குவித்து வரும் அனைத்து யோசனைகளையும் கருத்துகளையும் யதார்த்தமாக மாற்ற விரும்புகிறேன். நான் பல நம்பமுடியாத மக்களைச் சந்தித்திருக்கிறேன், பல நல்ல யோசனைகளை வெளிப்படுத்தினேன், மேலும் இந்தியாவில் பல விஷயங்களுக்கு என்னால் பங்களிக்க முடியும் என்று உணர்கிறேன்.
ஆரோக்கியத்தில் மிகுந்த ஆர்வமும் முதலீடும் கொண்ட உற்சாகமான நேரங்கள் இவை, அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். இந்தியாவிலும், இந்தியா போன்ற நாடுகளிலும், ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
உண்மையில் வலுவான மற்றும் நெகிழ்வான ஆரம்ப சுகாதார அமைப்புகளை உருவாக்க மற்றும் சமூகங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நான் எப்போதும் இந்தியாவில் வசிக்கவும் வேலை செய்யவும் விரும்பினேன், வெளிநாட்டில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், அது எப்போதும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.