இரட்டை இலை வழக்கில் சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டது என பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் கம்பியெண்ணுபவர் சுகேஷ் சந்திர சேகர். இவர் தொடர்பான வழக்கில் 54 வயதான பிங்கி இரானி என்ற பெண் மீதும் விசாரணை நடந்துவருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுகேஷ் சந்திர சேகருக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்-ஐ அறிமுகப்படுத்தியது முதல் பல்வேறு குற்றச் செயல்களில் பிங்கி இரானியும் இருப்பது தெரியவந்துள்ளது.
Advertisment
இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், “பிங்கி இரானி சுகேஷ் சந்திராவுக்கு வலதுகரமாக செயல்பட்டுள்ளார். கடந்த காலங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக செயல்பட்ட பிங்கி இரானிக்கு சினிமா மற்றும் மாடல் துறையில் பலரையும் தெரியும். இதனை வைத்துக் கொண்டு பல நடிகை மற்றும் மாடல்களை சுகேஷ் சந்திராவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிங்கி இரானி
முதலில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒப்பனை கலைஞரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பின்னர், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள் வாங்கி கொடுத்துள்ளனர். பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜே மற்றும் எஸ் பொறித்த வைர மோதிரமும் கொடுக்கப்பட்டுள்ளது” என்றனர். அமலாக்கத்துறை குற்ற பத்திரிகையில் சுகேஷ், பிங்கி இரானி சந்திப்பு 2016-17ஆம் ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் வாயிலாக நடந்துள்ளது.
Advertisment
Advertisements
மேலும் இந்தக் குற்றப் பத்திரிகையில் நடிகைகள், மாடல்களுக்கு ரூ.2 கோடி வரை ஆடம்பர பொருள்கள் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் சுகேஷ் சந்திரா மீது குற்றஞ்சாட்டுகள் வெளிவந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு கூடுதலாக ரூ.10 கோடி வரை கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சுகேஷ் சந்திராவுடன் வீடியோ காலிலும் பிங்கி இரானி உரையாடியுள்ளார். இதனை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில், பிங்கி இரானி மற்றும் சுகேஷ் சந்திராவுடன் தொடர்பில் இருந்த மற்ற மாடல்கள் மற்றும் நடிகைகளும் விசாரிக்கப்படுவார்கள் என போலீசார் கூறினர்.
சுகேஷ் சந்திரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நட்பு பாலிவுட்டை கலங்கடித்தது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil