Advertisment

திருமணமானவர்கள் ஏன் ராணுவத்தின் சட்டப் பிரிவில் இருக்க முடியாது: டெல்லி ஐகோர்ட் கேள்வி

ராணுவத்தின் சட்டப்பிரிவில் திருமணமானவர்களுக்கு வாய்ப்பு மறுப்பு; ஒரு நபரின் திருமண நிலை அவர்கள் பெறும் பயிற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா? மத்திய அரசிடம் டெல்லி ஐகோர்ட் கேள்வி

author-image
WebDesk
New Update
திருமணமானவர்கள் ஏன் ராணுவத்தின் சட்டப் பிரிவில் இருக்க முடியாது: டெல்லி ஐகோர்ட் கேள்வி

ராணுவத்தின் சட்டப் பிரிவான நீதிபதி அட்வகேட் ஜெனரல் (JAG) துறைக்கு திருமணமானவர்கள் பரிசீலிக்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஒரு நபரின் திருமண நிலை அவர்கள் பெறும் பயிற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று மத்திய அரசிடம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

Advertisment

தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, ஜே.ஏ.ஜி துறைக்கான விண்ணப்பதாரர்களுக்கு பணியமர்த்தப்படுவதற்கு முன்பு 11 மாத கடுமையான பயிற்சி இருந்ததாக சமர்பித்தார்.

இதையும் படியுங்கள்: 3 ஆண்டுகளுக்கு பிறகும்… அயோத்தி புதிய மசூதிக்கு அனுமதி கிடைக்கவில்லை… பணிகள் தொடங்கவில்லை

நீதிபதி பிரசாத், “திருமணம் மற்றும் தகுதியின் நியாயம் என்ன? திருமணமான ஒருவர் ஆயுதப் பயிற்சி பெறக்கூடாதா?... அதற்கு எந்தத் தொடர்பும் இருக்காது. தயவு செய்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், அப்போதுதான் கொள்கையை சோதிக்க முடியும் என்று கூறினார். இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா ஒரு தொடர்பு இருப்பதாகவும், அது ஒரு பிரமாணப் பத்திரத்தில் வைக்கப்படும் என்றும் கூறினார்.

ஒரு நபரின் திருமண நிலை பயிற்சியை எவ்வாறு பாதிக்கும் என்று நீதிமன்றம் கேட்டது, மேலும் இராணுவத்தில் நுழைவது குறித்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு கால அவகாசம் வழங்கியது.

வழக்கறிஞர் சாரு வாலி கன்னா மூலம் குஷ் கல்ரா தாக்கல் செய்த பொதுநல மனுவானது, JAG பிரிவில் தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களை "அவர்களின் திருமண நிலையைப் பொருட்படுத்தாமல்" அனுமதிக்க மத்திய அரசுக்கு வழிகாட்டுதலைக் கோருகிறது. இந்த மனு ஆகஸ்ட் 2018 இல் இராணுவத்தால் வெளியிடப்பட்ட "சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கும்" விளம்பரத்தை சவால் செய்கிறது.

JAG பதவிக்கான ஆட்சேர்ப்பு 21-27 வயதுக்குட்பட்டவர்களுக்கு என்பதால் திருமணமான விண்ணப்பதாரர்களுக்கு தடை பாரபட்சமானது என்றும், ஆண்களின் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 21 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 18 ஆண்டுகள் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறை உட்பட, சமமான தரவரிசையில் உள்ள சேவைகளில், திருமண அந்தஸ்துக்கு எந்தத் தடையும் இல்லை என்று மனு வாதிடுகிறது.

"ராணுவத்தால் நடைமுறைப்படுத்தப்படும் நிறுவனமயமாக்கப்பட்ட பாகுபாடு காரணமாக, 21-27 வயதுடைய சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர்களின் திருமண நிலையின் அடிப்படையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. திருமணத்தின் அடிப்படையில் இந்த பாகுபாடு சட்டத்தின் முன் சமத்துவம், பொது வேலை விஷயங்களில் சம வாய்ப்பு, எந்தவொரு தொழில் மற்றும் தொழிலையும் கடைப்பிடிக்கும் அடிப்படை உரிமை மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும். எந்தவொரு பகுத்தறிவு அடிப்படையும் இல்லாமல், திருமண நிலையின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்ட முடியாது” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Delhi Delhi High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment