Advertisment

சரக்கு கப்பல்களை தாக்கியவர்களை கடலின் ஆழத்தில் இருந்தாலும் கண்டுபிடிப்போம்; ராஜ்நாத் சிங்

கடலின் ஆழத்தில் இருந்தாலும் வணிகக் கப்பல்களைத் தாக்கியவர்களைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுப்போம்: ஐ.என்.எஸ் இம்பால் நாட்டு அர்ப்பணிக்கும் விழாவில் ராஜ்நாத் சிங் உறுதி

author-image
WebDesk
New Update
rajnath singh

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். (கோப்பு புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சரக்கு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை மத்திய அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், "கடலின் ஆழத்தில்" இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Will find attackers of merchant navy ships even from ‘depths of seas’, take strict action: Rajnath Singh

எம்.வி கெம் புளூட்டோ (MV Chem Pluto) கப்பல் மீதான ஆளில்லா விமானத் (ட்ரோன்) தாக்குதலையும், செங்கடலில் எம்.வி சாய்பாபா கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் இந்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. கடலின் ஆழத்தில் இருந்தாலும் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை நாங்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்,” என்று மறைமுகமாக வழிநடத்தப்பட்டு ஏவுகணை அழிக்கும் கப்பலான ஐ.என்.எஸ் இம்பாலை இயக்கிய பின்னர் பேசும்போது ராஜ்நாத் சிங் கூறினார்.

ராஜ்நாத் சிங் மேலும் கூறுகையில், சமீபத்தில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இந்தியா கடல்களில் ரோந்துப் பணியை முடுக்கிவிட்டுள்ளது, என்று கூறினார்.

21 இந்திய பணியாளர்களுடன் MV Chem Pluto என்ற வணிகக் கப்பல் போர்பந்தரில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து, இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை ஆகியவை கப்பலுக்கு உதவி செய்ய தங்கள் துருப்புக்களை அனுப்பின.

25 இந்திய பணியாளர்களுடன் காபோன் கொடியுடன் கூடிய கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் தெற்கு செங்கடலில் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், வர்த்தக டேங்கர் கப்பல் இந்தியக் கொடியுடன் வந்த கப்பல் அல்ல என்று இந்திய அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர் ஹரி குமார், வணிகக் கப்பல்களில் கடற்கொள்ளையர்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தடுக்க நான்கு தடுப்பு கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.

P-8I விமானம், டோர்னியர் (Dorniers), சீ கார்டியன் (Sea Guardians_, ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், இவை அனைத்தும் கடற்கொள்ளை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டாக சேவை செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஹரி குமார் கூறினார்.

கூடுதல் தகவல்கள்: PTI

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Rajnath Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment