'ஆர்.எஸ்.எஸ் இல்லாவிட்டால் இந்துஸ்தான் இருந்திருக்காது' - பாஜக தலைவர் சதிஷ் பூனியா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Without RSS, there would have been no Hindustan New Rajasthan BJP chief Satish Poonia - 'ஆர்.எஸ்.எஸ் இல்லாவிட்டால் இந்துஸ்தான் இருந்திருக்காது' - பாஜக தலைவர் சதிஷ் பூனியா

Without RSS, there would have been no Hindustan New Rajasthan BJP chief Satish Poonia - 'ஆர்.எஸ்.எஸ் இல்லாவிட்டால் இந்துஸ்தான் இருந்திருக்காது' - பாஜக தலைவர் சதிஷ் பூனியா

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நாடு முழுவதும் நிர்வாகிகள் மாற்றம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனங்களை பாஜக தலைமை செய்து வருகிறது. அவ்வகையில், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலத்துக்கு புதிய தலைவர்களை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா இன்று நியமனம் செய்துள்ளார்.

Advertisment

ராஜஸ்தான் மாநில தலைவராக சதிஷ் பூனியா மற்றும் பீகார் மாநில தலைவராக சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் தனது முதல் கருத்துகளை வெளியிட்ட ஆர்எஸ்எஸ் பின்னணியைக் கொண்ட சதிஷ் பூனியா, ஆர்.எஸ்.எஸ் இல்லாவிட்டால் இந்துஸ்தான் இருந்திருக்காது என்று கூறியுள்ளார்.

ஜாட் தலைவரான பூனியா, அனைத்து சாதிகளையும் சமூகங்களையும் அழைத்துச் செல்வது தனது முன்னுரிமையாக இருக்கும் என்று கூறினார்.

Advertisment
Advertisements

அவரது ஆர்.எஸ்.எஸ் பின்னணி குறித்து கேட்டபோது, "ஆர்.எஸ்.எஸ் இல்லை என்றால், இந்துஸ்தான் இருந்திருக்காது. ஆர்.எஸ்.எஸ் இவ்வளவு பெரிய சக்தி என்பதால், ‘பக்வா’ (காவி) எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறது." என்றார்.

ராஜஸ்தான் பாஜக செய்தித் தொடர்பாளராக பணியாற்றிய சதிஷ் பூனியா, மாநில கட்சி இயக்கத்தையும் கவனித்து வந்தார். தற்போது ராஜஸ்தான் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: