Wockhardt offers to make 2 billion Covid vaccine doses a year Tamil News : பிப்ரவரி 2022-க்குள் 500 மில்லியன் டோஸ் திறன் கொண்ட கோவிட் -19 தடுப்பூசிகளை ஆண்டுக்கு இரண்டு பில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடியும் என்று இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான வோக்ஹார்ட் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் மும்பையைச் சேர்ந்த வோக்ஹார்ட் நிறுவனம் மத்திய அரசுக்கு முறையான சமர்ப்பிப்பில், நாட்டில் சாத்தியமான பார்ட்னர்களை அடையாளம் காண உதவி கோரியுள்ளது. கோவிட் -19 தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான சில தொழில்நுட்பங்களை "அணுகும்" செயலிலும் இது உள்ளது. எம்.ஆர்.என்.ஏ, புரத அடிப்படையிலான மற்றும் வைரஸ் வெக்டர் சார்ந்த தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வழங்க அனுமதிக்கும் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதற்கான உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி திறன் தன்னிடம் இருப்பதாக வோக்ஹார்ட் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் சலுகையை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. வோக்ஹார்ட்டுக்கான கேள்விகள் கடந்த செவ்வாய்க்கிழமை பிரெஸ் time-ஆல் பதிலளிக்கப்படவில்லை.
சுதேசி ஜாக்ரான் மன்ச் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் அண்மையில் வழங்கப்பட்ட விளக்கக்காட்சியில், “எந்தவொரு நிறுவனத்துடனும் (கோவிட் -19 தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்காக) கூட்டுறவு கொள்ள விரும்புவதாக வோக்ஹார்ட் கடந்த வாரம் எங்களிடம் தெரிவித்தது. நாங்களும் அதற்காக செயல்பட்டு வருகிறோம். நிச்சயம் நாங்கள் அவர்களை ஒரு நிறுவனத்துடன் இணைத்துக்கொள்வோம்” என்று இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான மாநில அமைச்சர் அன்சுக் எல் மாண்டவியா தெரிவித்தார்.
இந்தியாவிற்கு வெளியே, வோக்ஹார்ட் ஏற்கனவே இங்கிலாந்து அரசாங்கத்துடன் கோவிட் -19 தடுப்பூசிகளை பிரிட்டனுக்காக மட்டுமே தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை, அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியை பாட்டில்களில் நிரப்பவும், நாட்டின் நோய்த்தடுப்புத் திட்டத்தில் பயன்படுத்த அவற்றைத் தொகுக்கவும் வடக்கு வேல்ஸில் உள்ள தனது ஆலையைப் பயன்படுத்தி வருகிறது.
இந்தியா தனது மக்கள்தொகையை கணக்கில் கொண்டு தடுப்பூசிகளின் தேவையைப் பூர்த்தி செய்யப் போராடி வருவதால், அதன் வளர்ச்சி முக்கியமானது. இது சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) மற்றும் பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்களை மற்ற உயிர்காக்கும் தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கான திறனை மீண்டும் உருவாக்கத் தள்ளியுள்ளது.
உயிர் பாதுகாப்பு நிலை 3 (பிஎஸ்எல் 3) வசதியின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் நீண்ட வெளியீட்டு நேரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தயாரிக்க வோக்ஹார்ட் திட்டமிடவில்லை.
"ஒரு தடுப்பூசியின் இரண்டு பில்லியன் அளவுகளை உருவாக்குவது நோக்கம் அல்ல. ஆனால், இன்னும் நிலையான செயல்பாடு இருப்பதற்காக 2-3 தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம்" என்று தடுப்பூசி வளர்ச்சிக்கு நெருக்கமான நபர் குறிப்பிடுகிறார்.
இந்த தளங்களைப் பயன்படுத்தி, "எந்த" கோவிட் -19 தடுப்பூசியையும் ஆண்டுக்கு 500 மில்லியன் டோஸ் தயாரிக்கும் திறனை "விரைவாக" நிறுவ வோக்ஹார்ட் திட்டமிட்டுள்ளார். இந்த திறனை அமைக்க ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும், ஒரு சர்வதேச நிறுவனத்துடனான ஒப்பந்தம் “அடுத்த சில வாரங்களில்” சாத்தியமாகும் என்றும் அந்த நபர் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil