'வீர உணர்வு இல்லை'.. பஹல்காமில் கணவனை இழந்த பெண்கள் குறித்து பா.ஜ.க. எம்.பி. கருத்து

பஹல்காமில் நடந்த தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும் என்றும் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் வீர உணர்வு கொண்டிருக்கவில்லை என்றும் கூறி பாஜக எம்.பி. ராம்சந்தர் ஜாங்கிரா சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பஹல்காமில் நடந்த தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும் என்றும் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் வீர உணர்வு கொண்டிருக்கவில்லை என்றும் கூறி பாஜக எம்.பி. ராம்சந்தர் ஜாங்கிரா சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

author-image
WebDesk
New Update
BJP MP on Pahalgam

கணவர்களை இழந்த பெண்களுக்கு வீர உணர்வு இல்லை: பஹல்காம் குறித்து பா.ஜ.க எம்.பி. கருத்து

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும் என்றும் தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் வீர உணர்வு கொண்டிருக்கவில்லை என்றும் கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.யான ராம்சந்தர் ஜாங்கிரா சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Advertisment

“அங்கே எங்கள் சகோதரிகள் இருந்தனர். அவர்களின் மாங்கல்யம் பறிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஒரு வீராங்கனை போல எண்ணவில்லை, உற்சாகம் இல்லை, வேட்கை இல்லை, தைரியம் இல்லை. அதனால்தான் கைகளைக் கூப்பியபடியே தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார்கள்,” என்று ஜாங்கிரா தெரிவித்தார். ஆனால், கைகளை கூப்பிப்பதால் யாரும் விட்டு விடுவதில்லை. எங்கள் மக்கள் அங்கே கைகளை கூப்பியபடியே கொல்லப்பட்டார்கள் என்றும் அவர் கூறினார். இந்த கருத்துகளை ஹரியானாவின் பிவானியில் நடந்த அஹல்யாபாய் ஹோல்கரின் 300-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது ஜாங்கிரா தெரிவித்தார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Women who lost husbands ‘lacked’ warrior spirit

தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் ஹோல்கரின் வரலாற்றை படித்திருந்தால், அவர்களது கணவர்களை அப்படிப் பக்கத்தில் வைத்து யாரும் கொலை செய்ய முடியாது என்று அவர் கூறினார். “யாத்ரீகர்கள்  பயிற்சி பெற்றிருந்தால், 3 பயங்கரவாதிகள் 26 பேரை கொலை செய்ய முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisment
Advertisements

"அக்னிவீர் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்ட பா.ஜ.க. எம்.பி., ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் அக்னிவீர் பயிற்சி பெற்றிருந்தால், அவர்கள் பயங்கரவாதிகளைச் சூழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும், அதனால் உயிரிழப்புகள் குறைந்திருக்கும் என்றும் கூறினார். சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடியிருக்க வேண்டும்" என்று ஜாங்கரா தெரிவித்தார்.

"நிச்சயமாக சண்டையிட்டிருக்க வேண்டும். அவர்கள் சண்டையிட்டிருந்தால், உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும், குறைவானவர்களே கொல்லப்பட்டிருப்பார்கள். கைகூப்புவதால் யார் விட்டுவிடுவார்கள்? அவர்கள் கொல்லத்தான் வந்தார்கள். அவர்கள் பயங்கரவாதிகள். மனதில் கருணை இருக்காது" என்று ஜாங்கரா கூறினார்.

Jammu And Kashmir Bjp

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: