Advertisment

மகளிர் மசோதா: களமிறக்கினால் மட்டும் போதுமா? 2022-ல் உ.பி.யில் இருந்து காங்கிரஸ் கற்ற பாடம்

பிரியங்கா பிரச்சாரத்தில் உரத்த குரலில் பெண்களுக்கு 40% இடங்கள் ஒதுக்கப்பட்டன; களமிறக்கப்பட்ட 155 பெண்களில் 1 பெண் மட்டுமே வெற்றி பெற்றார். அவர்களில் பெரும்பாலோர் டெபாசிட் இழந்தனர்.

author-image
WebDesk
New Update
pr

மகளிர் மசோதா: களமிறக்கினால் மட்டும் போதுமா? 2022-ல் உ.பி.யில் இருந்து காங்கிரஸ் கற்ற பாடம்

பிரியங்கா பிரச்சாரத்தில் உரத்த குரலில் பெண்களுக்கு 40% இடங்கள் ஒதுக்கப்பட்டன; களமிறக்கப்பட்ட 155 பெண்களில் 1 பெண் மட்டுமே வெற்றி பெற்றார். அவர்களில் பெரும்பாலோர் டெபாசிட் இழந்தனர். வெளியாட்களை தேர்வு செய்வது காங்கிரஸை பாதித்ததாக கட்சி ஒப்புக்கொள்கிறது.

Advertisment

மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் அதை செயல்படுத்துவதில் தாமதம் மற்றும் அதில் ஓ.பி.சி ஒதுக்கீடு வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியது.

ஆங்கிலத்தில் படிக்க: Women’s Bill: Is just fielding more enough? A Congress lesson from UP, 2022

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தலைமையிலான 'லட்கி ஹன், லத் சக்தி ஹன்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 40% இடங்களை ஒதுக்கிய உத்தரபிரதேசத்திலிருந்து சில குறிப்புகளை எடுக்கலாம். இதன் விளைவாக, கட்சி தான் போட்டியிட்ட 399 இடங்களில் (மொத்தம் 403 இடங்கள்) 155 இடங்களில் பெண்களை களமிறக்கியது, அவர்களில் பலர் குறைந்த அரசியல் இருப்பு கொண்ட வேட்பாளர்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் திவாரியின் மகள் ஆராத்னா மிஸ்ரா உள்பட மொத்தம் 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.

2022 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் நிறுத்திய பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் பதிவான வாக்குகளில் 1%-க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர். அவர்கள் டெபாசிட் இழந்தனர்; 2,000 வாக்குகளைப் பெற்றது ஒரு பெரிய எண்ணிக்கையாக இருந்தது; தேர்தல்கள் முடிந்து தூசி தட்டப்பட்டு, கட்சி நிகழ்வுகளில் சிலர் காணப்பட்டனர்.

பிஜேபி மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே இந்த தேர்தல் இருமுனை போட்டியாக மாறியதே - கட்சியின் மோசமான செயல்பாட்டிற்கு காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் வாதிடுகையில், அடித்தளம் இல்லாமல் வேட்பாளர்களை மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டத்தில் திணித்தது ஒரு காரணி என்று பலர் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்கிறார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார்: “தேர்தலுக்குப் பிறகு கட்சியை விட்டு வெளியேறியவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினம் என்றாலும் - அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை - ஒரு தெளிவான சமிக்ஞையாக இருந்தது, கட்சியின் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் கூட்டத்தில் (வாக்கெடுப்புக்குப் பிறகு) 38-40 பெண் வேட்பாளர்கள் மட்டுமே வந்திருந்தனர். சிலர் தங்கள் கணவர்களை அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், கட்சியின் பெண் வேட்பாளர்களை தனிமைப்படுத்துவது நியாயமற்றது என்று தலைவர் மேலும் கூறுகிறார்.  “நாங்கள் 399 இடங்களில் போட்டியிட்டோம், அதே விதியை ஆண் வேட்பாளர்களும் சந்தித்தனர், ஒருவர் வெற்றி பெற்றார்.

ஆராதனா மிஸ்ரா - பிரதாப்கரின் ராம்பூர் காஸில் இருந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றவர், அவரது தந்தை ஏழு முறை வெற்றி பெற்ற தொகுதி -  பெண்களை மையமாகக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார். ‘லட்கி ஹன், லத் சக்தி ஹன்’ பிரச்சாரக் களத்தின் ஒரு பகுதியாக பிரியங்காவுடன் மாநிலம் முழுவதும் பயணம் செய்த அவர், இந்த பிரச்சாரம் பெண்களுடன் இணைந்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால், அதன் கருத்தை அவர்கள் புரிந்துகொண்டது மிகவும் விரைவாக இருக்கலாம்.

காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ரா மேலும் கூறியதாவது: “இதை (40% இடங்களில் பெண்களை களமிறக்குவது) ஒரு சோதனை என்று சொல்வது தவறு. உன்னாவ் முதல் ஹத்ராஸ் வரை மாநிலம் முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் அட்டூழியங்களை கருத்தில் கொண்டு இது நன்கு யோசித்து திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவாகும். பெண்கள் எங்களுடன் எளிதாக இணைந்துள்ளனர்” என்று கூறுகிறார்.

இந்த புத்திசாலித்தனமான நடவடிக்கை வெற்றி பெறாததற்கு, அவர் பல காரணங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார்.  “அனேகமாக, இது முதல் தடவையாக இருந்ததால், மக்கள் இதை ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை.” என்று கூறுகிறார்.

அதனால்தான், ஆராதனா மிஸ்ராவின் கருத்துப்படி, பெண்களுக்கு இடஒதுக்கீடு இருந்தால் விஷயங்களை மாற்ற முடியும். “பஞ்சாயத்துத் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது நிலைமை மாறியது உண்மைதான். தொகுதி தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்டேன்.” என்று கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 559 பெண்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் 155 பேரைத் தவிர, பா.ஜ.க சார்பில் 45 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 38 பேரும், சமாஜ்வாதி கட்சி சார்பில் 42 பேரும் களமிறக்கப்பட்டனர். 559 பெண் வேட்பாளர்களில், 47 பேர் வெற்றி பெற்றனர் - காங்கிரஸில் 1, சமாஜ்வாடி கட்சியில் 12, மீதமுள்ளவர்கள் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் வெற்றி பெற்றனர்.

தேர்தல் முடிவுகள் அந்தந்த கட்சிகளின் வாய்ப்புக்கு இணையாக இருந்தன. எடுத்துக்காட்டாக, 2017-ல், சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டபோது, காங்கிரஸ் தனது 114 வேட்பாளர்களில் 12 பெண்களை மட்டுமே நிறுத்தியது. அதில் 2 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் தலா 40,000 வாக்குகளுக்கு மேல் பெற்றனர்.

காங்கிரஸின் 2017 பிரச்சாரம் பெண்களை மையமாகக் கொண்டது அல்ல, பிரியங்கா களத்தில் இல்லை, ஆனால் கட்சி இன்னும் மாநிலத்தில் ஓரளவு பிடியில் இருந்தது, அதற்கு சமாஜ்வாடி உடனான கூட்டணி உதவியது.

2017-ல் தோல்வியடைந்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்கள் மத்தியில் அவர்கள் இடம்பெற்றிருந்தாலும், 2017-ல் விம்லேஷ் குமாரி சந்தௌசி சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்குகளில் 26% பெற்றார்; உமா காந்த் கல்பியில் இதேபோல் சிறப்பாக செயல்பட்டார். உஷா மௌரியா கிட்டத்தட்ட 31% வாக்குகளைப் பெற்றார்; ஜீபா ரெஹ்மான் துளசிபூரில் சுமார் 21% வாக்குகளைப் பெற்றார்.

காங்கிரஸ் 2022-ல் மீண்டும் சந்தௌசி சட்டமன்றத் தொகுதியான மிதிலேஷ் குமாரியில் ஒரு பெண்ணை நிறுத்தியது, ஆனால், அவர் வெறும் 1,500 வாக்குகள் அல்லது மொத்த வாக்குகளில் 0.7% மட்டுமே பெற்றார்.

இதேபோல், 2017-ல், மாணிக்பூரின் காங்கிரஸ் பெண் வேட்பாளர், பிரபல சமூக சேவகர் சம்பத் பால், சுமார் 40,000 வாக்குகள் மற்றும் 20% வாக்குகளைப் பெற்றார், 2022-ல், அதன் வேட்பாளர் ரஞ்சனா பார்தி லால் 4,110 வாக்குகள் (மொத்த வாக்குகளில் 1.98%) பெற்றார். 

2017-ல் வெற்றி பெற்ற காங்கிரஸின் 2 பெண் வேட்பாளர்களில், ஆரதனா மிஸ்ரா 2022-ல் மீண்டும் வெற்றி பெற்றார், ஆனால் அதிதி சிங் காங்கிரஸ் கட்சியை விட்டு பா.ஜ.க-வுக்கு சென்றார். ரேபரேலி சட்டமன்றத் தொகுதியில் 1.2 லட்சம் வாக்குகள் (மொத்தத்தில் 61%) பெற்று வெற்றி பெற்ற அவர், 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸை விட்டு வெளியேறினார். 2022 சட்டமன்றத் தேர்தலில், அவர் ரேபரேலியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று சுமார் 1 லட்சம் வாக்குகளைப் பெற்றார்.

ஆராதனா மிஸ்ரா 2017 (81,000 வாக்குகள் அல்லது மொத்தத்தில் 47% வாக்குகள்) மற்றும் 2022 (86,000 வாக்குகள் அல்லது மொத்தத்தில் சுமார் 50% வாக்குகள்) ஆகிய இரண்டிலும் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் ராம்பூர் காஸ் கட்சியின் பாரம்பரிய இடமாகவும், மிஸ்ராவின் தந்தை பிரமோத் திவாரியின் களமாகவும் உள்ளது.

2022 ஆம் ஆண்டில் கட்சியின் பெண் வேட்பாளர்களின் செயல்திறன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா குப்தா கூறினார்: “ஒரு தோல்விக்குப் பின்னால் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன, ஆனால், பெண்களை மையமாகக் கொண்ட பிரச்சாரம் நிச்சயமாக அவற்றில் ஒன்றல்ல. மறுபுறம், இது பெண்கள், சிறுமிகளின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்த்தது. அதை மக்கள் ஏற்றுக் கொள்ள நேரம் எடுக்கும்.” என்று கூறினார்.

பிரியங்கா காந்தியே தலைமை தாங்கினார் என்று 2022 பிரச்சாரத்தைப் பற்றி பகிரங்கமாகப் பேசத் தயங்கினாலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியது, “பிரச்சனை என்னவென்றால், உள்ளூரில் யாரையும் கலந்தாலோசிக்கவில்லை, இந்த பெண் வேட்பாளர்களில் பலர் வெளியாட்களாக இருந்தனர். காங்கிரஸ் கட்சி அதன் மகிளா காங்கிரஸ் தலைவர்களை ஆதரித்திருந்தால், அவர்கள் குறைந்த பட்சம் பின்வாங்கி, எதிர்காலத்திற்காக கட்சியை பலப்படுத்தியிருப்பார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் செய்தித் தொடர்பாளர் சேத்னா பாண்டே கூறுகையில், பெண்கள் பிரதிநிதித்துவத்திற்கான காங்கிரஸ் முயற்சி துண்டு துண்டானது. உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர்களின் தீவிரம் குறித்து பொதுமக்கள் நம்பவில்லை. அதனால்தான், பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் சீட் கொடுத்தாலும், அவர்களின் பிரச்சாரத்தின் முகம் கூட (லட்கி ஹூன், லத் சக்தி ஹூன்) பா.ஜ.க-வில் சேர்ந்தது, மேலும் அவர்களின் பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் அவர்களின் கட்சித் தலைவர்களைப் போல தெரியவில்லை.” என்று கூறினார்.

காங்கிரஸ் தோல்வியடைந்ததால், பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேசத்தில் செயல்படவில்லை.

எண்ணிக்கை விவரம்

* 2017-ல், காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடச் செய்த 114 வேட்பாளர்களில், 12 பெண்களை நிறுத்தியது. அதில் 2 பேர் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பெரும்பாலான பெண் வேட்பாளர்கள் தலா 40,000 வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.

* 2022-ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 399 வேட்பாளர்களில் 155 பெண்களை நிறுத்தியது. அக்கட்சியில் 2 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் பெண். பெரும்பாலானோர் தங்கள் இடத்தில் 1%க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர், ஒரு பெரிய எண்ணிக்கை என்றால் மொத்தத்தில் 2,000 வாக்குகளைப் பெற்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment