பார்சல் வாங்கி வந்த பரோட்டாவில் புழு... வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்

புதுச்சேரியில், உணவகத்தில் இருந்து வாங்கி வந்த பரோட்டா, சால்னாவில் புழு மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உணவக ஊழியர்களுடன் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரியில், உணவகத்தில் இருந்து வாங்கி வந்த பரோட்டா, சால்னாவில் புழு மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உணவக ஊழியர்களுடன் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Parotta issue

புதுச்சேரியில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய பரோட்டா மற்றும் சால்னாவில் புழு இருந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுச்சேரியின், அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் பிரபல உணவகத்தில் இருந்து, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் 8 பரோட்டாக்களை பார்சல் வாங்கி தனது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டிற்கு சென்று பரோட்டாக்களை பிரித்துச் சாப்பிட்ட மணிகண்டன், அதில் புழு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து, சாப்பிட்ட தட்டுடன் உணவகத்திற்கு சென்ற மணிகண்டன், உணவக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பரோட்டாவை தனது குழந்தைகள் உள்ளிட்டோர் சாப்பிட்டதாகவும், ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நிச்சயம் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான வீடியோவை மணிகண்டன் இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அது ட்ரெண்டாகி வருகிறது. அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் உணவகங்களில் ஏற்படுவதால் உணவு பாதுகாப்பு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisment
Advertisements

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Food Pondicherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: