ரயிலில் பயணிக்கும்பொது பிடித்த உணவுகளை ஆடர் செய்யும் முறையை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது.
ரயிலில் பணிக்கும்போது, சில வகையான உணவுகள் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பயணம் செய்யும்போது எப்போதுமே நாம் உணவை எடுத்துக்கொண்டு போவோம். இந்நிலையில் ரயிலில் கிடைக்கும் உணவுகள் தரமற்றதாக இருக்கும் இதனால் பயணிகளை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள்.
ஆனால் இப்போது தொலைதூர பயணிங்களின்போது தரமான உணவுகளை இனி பயணிகள் ஆடர் செய்யும் முறையை இந்திய ரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. இனி சப்பாத்தி, இட்லி, பிரியானி போன்ற குறிப்பிட்ட வகை உணவுகளையும் தாண்டி, உள்ளூரில் புகழ்பெற்ற உணவு வகைகள், பண்டிகைகால உணவு வகைகள் போன்றவற்றை வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதனால் இனி ரயில் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவுகளை ஐஆர்சிடிசி மூலமாக ஆர்டர் செய்யலாம்.
.