Advertisment

ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யில் இருந்து விலகும் எம்.பி.க்கள்; வேட்பாளர்களை மாற்றி ‘ரிஸ்க்’ எடுக்கிறாரா ஜெகன்? நிர்வாகிகள் கவலை

ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னாள் ஆதரவாளரும் ஓங்கோல் எம்.பி.யுமான எம்.ஸ்ரீனிவாசுலு ரெட்டி, டெல்லி கலால் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட மற்றும் அரசு சாட்சியாக மாறிய தனது மகனுக்கு சீட் கேட்டதாகக் கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Srinivasulu MP AP

ஓங்கோல் எம்.பி ஸ்ரீனிவாசுலு ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியை விட்டு வெளியேறினார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி (ஒய்.எஸ்.ஆர்.சி.பி)-க்கு மற்றொரு அதிர்ச்சியாக, ஓங்கோல் எம்.பி மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி புதன்கிழமை சுயமரியாதை பிரச்னையைக் காரணம் காட்டி கட்சியில் இருந்து விலகினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Fifth YSRCP MP quits party, leaders worry if Jagan ticket shuffling a risky bet

வல்லபனேனி பாலசோவ்ரி (மச்சிலிப்பட்டினம் எம்.பி), கே ரகு ராமகிருஷ்ண ராஜு (நரசாபுரம்), லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயலு (நரசரோப்பேட்டா), சஞ்சீவ் குமார் (கர்னூல்) மற்றும் வி. பிரபாகர் ரெட்டி (ராஜ்யசபா எம்.பி) ஆகியோர் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியை விட்டு வெளியேறினர். இவர்களுக்குப் பிறகு, ஸ்ரீனிவாசுலு தனது மகன் டெல்லி கலால் ஊழல் வழக்கில் ‘அப்ரூவராக’ மாறிய நிலையில், கட்சியை விட்டு வெளியேறினார். இதன் மூலம், கடந்த சில வாரங்களாக ஒய்.எஸ்.அர்.சி.பி கட்சியை விட்டு வெளியேறிய எம்.பி.க்களில் ஸ்ரீனிவாசுலு ஐந்தாவது எம்.பி ஆனார். பாலசோவ்ரி ஜனசேனா கட்சியில் (ஜே.எஸ்.பி) சேர்ந்துள்ள நிலையில், மற்றவர்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர் அல்லது விரைவில் ஜே.எஸ்.பி கூட்டணியான தெலுங்கு தேசம் கட்சியில் (டி.டி.பி) சேருவார்கள்.

“எங்களுக்கு ஈகோ இல்லை, சுயமரியாதை அதிகம். எப்பொழுதும் நமது சுயமரியாதையை பாதுகாப்பது முக்கியம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சியில் இருந்து வெளியேற வேண்டியுள்ளது. இது ஒரு சோகமான நிகழ்வு” என்று ஸ்ரீனிவாசுலு தனது முடிவை அறிவித்தார்.

ஓங்கோல் மக்களவைத் தொகுதியில் தனது மகன் எம். ராகவ ரெட்டிக்கு சீட்டு வழங்க வேண்டும் என்று முயற்சி செய்த ஸ்ரீனிவாசுலு, ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரகிரி எம்.எல்.ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியை நாடாளுமன்றப் பொறுப்பாளராக நியமித்ததைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட அவரது வாய்ப்புகளை முடிவுக்கு வந்ததால் கோபமடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

வரவிருக்கும் ஒரே நேரத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களாகக் கூறப்படும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை ஜெகன்மோகன் ரெட்டி நியமித்து வருகிறார். ஆட்சிக்கு எதிரானவர்களை முறியடிக்கும் நோக்கத்துடன், கட்சியில் இருந்து சமீபகாலமாக விலகிய பலவற்றிற்குப் பின்னால் உள்ள சிட்டிங் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்குப் பதிலாக புதிய பெயர்களை அக்கட்சி பயன்படுத்துகிறது.

ஸ்ரீனிவாசுலு தெலுங்கு தேசம் கட்சியில் சேர வாய்ப்புள்ளதாக எம்.பி.க்கு நெருக்கமான தலைவர்கள் கூறியுள்ளனர். இது அவரது மகனுக்கு சீட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்செயலாக, மீண்டும் எழுச்சி பெறும் பா.ஜ.க.வுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் நம்பிக்கையில் டி.டி.பி - ஜே.எஸ்.பி கட்சிகள் உள்ளன.

ஓங்கோல் எம்.பி கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ஜி தீபக் ரெட்டி உறுதிப்படுத்தினார். “அவரது மகனுக்கு ஓங்கோலில் இருந்து டிக்கெட் கொடுப்பது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், கட்சித் தலைவர் (சந்திரபாபு நாயுடு) நெல்லைக்கு வருகை தந்ததும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

ஓங்கோல் எம்.பி.க்கு திரையரங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் மதுபான ஆலைகள் உட்பட பல வணிகம் இருக்கின்றன. 

"தெற்குக் குழுவின்" ஒரு பகுதியாக கூறப்படும் டெல்லி கலால் ஊழலில் அவரது மகனின் பெயர் இடம்பெற்றதை அடுத்து, ஜெகனுக்கும் ஓங்கோல் எம்.பி.க்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்ததாக கட்சி உள்விவகாரங்கள் தெரிவித்தன. ஸ்ரீனிவாசுலுவிடம் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இது தெற்கு குழு என்று அழைக்கப்படுபவை ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு தடையின்றி அணுகல் மற்றும் தேவையற்ற சலுகைகளுக்கு ஈடாக ரூ. 100 கோடி அளவுக்கு நிதி ஆதாயம் கொடுத்ததாக குற்றம் சாட்டியது.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட பல ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டதையும், தெலங்கானா எம்.எல்.சி மற்றும் பி.ஆர்.எஸ் கட்சி மூத்த தலைவர் கே. கவிதாவுக்கும் பல சம்மன்களையும் அனுப்பிய வழக்கில் ராகவா குற்றத்தை ஒப்புக்கொண்டதில் இருந்து முக்கியமான தகவல்களை அமலாக்க இயக்குனரகத்திற்கு அளித்ததாக நம்பப்படுகிறது.

ஜெகன் அழைப்பு விடுத்த ஒரு கூட்டத்தைத் தவிர்த் ஒரு நாள் கழித்து, ஓங்கோல் எம்.பி.யின் ராஜினாமா வந்துள்ளது. அங்கே அவர் தேர்தலின் போது அனைத்து கட்சித் தொண்டர்களுக்கும் முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில் 2,700 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். கடந்த மாத தொடக்கத்தில், ஸ்ரீனிவாசுலு, ஓங்கோல் நிகழ்ச்சியிலும், ஜெகன் பயனாளிகளுக்கு நிலப் பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.

ஓங்கோலில் இருந்து 4 முறை எம்.பி.யாக உள்ள ஸ்ரீனிவாசுலு, 2019-ம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சிக்கு சென்று அக்கட்சியின் சீட்டி போட்டியிடுவதற்கு முன், காங்கிரஸ் சீட்டில் மூன்று முறை வெற்றி பெற்றார். 2014-ல் யு.பி.ஏ அரசாங்கம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை எதிர்த்து காங்கிரஸிலிருந்து விலகினார். அந்த மசோதா ஒன்றுபட்ட ஆந்திரா மாநிலத்தை பிரிக்க வழிவகுத்தது. ஸ்ரீனிவாசுலு முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் (டி.டி.பி) சேர்ந்தார். ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி மூத்த தலைவரும் ஜெகனின் மாமாவுமான ஒய்.வி. சுப்பா ரெட்டியிடம் தோற்றார். பின்னர், அவர் சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஓங்கோலில் உள்ள ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர்களில் ஒரு பகுதியினர், எம்.பி. கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக, அதன் உள் ஆய்வுகள் அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு காட்டுவதாகக் கூறுகின்றனர்.  “அவர் தோல்வி அடையப் போகிறார் என்று அவருக்குத் தெரியும், எனவே அவர் மாற்றப்பட்டுள்ளார். அதனால்தான், விலகினார். அவரது வெளியேற்றம் எங்கள் வெற்றி வாய்ப்புகளை பாதிக்காது” என்று பிரகாசம் மாவட்டத்தின் ஒய்.எஸ்.ஆர்.சி.பி மாவட்ட பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.

இருப்பினும், தொண்டர்கள் இந்த மாற்றங்களைப் பற்றி ஆர்வம் குறைந்து இருப்பதாகத் தெரிகிறது.  “இந்த மாற்றங்கள் தொண்டர்கள் இடையே குழுக்களை உருவாக்குகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால், எங்களால் கோஷ்டிகளை உருவாக்க முடியாது. தேர்தலில் வெற்றி பெற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம், தெலுங்கு தேசம் கட்சி - ஜே.எஸ்.பி கூட்டணியை தோற்கடிக்க கட்சிக்குள் ஒற்றுமை மிகவும் முக்கியமானது” என்று ஒரு தலைவர் சுட்டிக்காட்டினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment