Advertisment

இலங்கையில் 5 அமைச்சர்கள் பதவி நீக்கம்… டாப் 5 உலகச் செய்திகள்

இலங்கையில் 5 அமைச்சர்கள் பதவி நீக்கம்; இந்தியா- பாகிஸ்தான் இடையே நல்லுறவு பா.ஜ.க ஆட்சியில் சாத்தியமில்லை – இம்ரான் கான்… இன்றைய உலகச் செய்திகள்

author-image
WebDesk
New Update
இலங்கையில் 5 அமைச்சர்கள் பதவி நீக்கம்… டாப் 5 உலகச் செய்திகள்

இன்று உலக நாடுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.

Advertisment

இலங்கையில் 5 அமைச்சர்கள் பதவி நீக்கம்

கட்சியின் ஒழுக்கத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அரசாங்கத்தில் இரண்டு முக்கிய அமைச்சர்கள் உட்பட 5 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமளிக்கும் வரை அவர்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் உள்ள மூன்று இணை அமைச்சர்களும் நேற்று இரவு கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 252 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள ஒரு நகரத்தை பேரழிவிற்கு உட்படுத்திய நிலநடுக்கத்தால் இறந்த 252 பேரில் பள்ளிகள் இடிந்து விழுந்ததில் பல குழந்தைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர், மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க முயன்று வருகின்றனர்.

publive-image

திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலைகளில் 5.6 ரிக்டர் அளவிலான ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டது, இது சியாஞ்சூர் நகரத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது மற்றும் நிலச்சரிவின் கீழ் குறைந்தது ஒரு கிராமத்தையாவது புதைத்தது.

சீனாவில் தொழிற்சாலை தீ விபத்தில் 36 பேர் மரணம்

மத்திய சீனாவில் வர்த்தக நிறுவனம் ஒன்றின் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலியாகினர் மற்றும் இருவரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

publive-image

ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரின் வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள வர்த்தக மற்றும் வர்த்தக நிறுவனத்தின் ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக எடுத்ததாக நகர விளம்பரத் துறை தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நல்லுறவு பா.ஜ.க ஆட்சியில் சாத்தியமில்லை – இம்ரான்

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்ல உறவை விரும்புவதாக திங்களன்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் இம்ரான் கான் கூறினார், ஆனால் தேசியவாத பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் போது இது நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

publive-image

திங்களன்று பிரிட்டிஷ் செய்தித்தாள் ‘தி டெலிகிராப்’ க்கு அளித்த பேட்டியில், 70 வயதான கான், இரு அண்டை நாடுகளும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

"நன்மைகள் மிகப்பெரியதாக இருக்கும்", ஆனால், காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக இருந்தது என்று இம்ரான் கான் கூறினார்.

"இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் பா.ஜ.க அரசாங்கம் மிகவும் கடுமையானது, அவர்கள் பிரச்சினைகளில் தேசியவாத நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்," என்று இம்ரான் கான் கூறினார்.

உலக கோப்பை மைதானத்தில் ரெயின்போ டி-சர்ட் அணிந்த பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு

கத்தாரில் உள்ள ஃபிஃபா உலகக் கோப்பை மைதானத்தில் திங்களன்று ரெயின்போ டி-சர்ட் அணிந்ததற்காக அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

publive-image

நியூயார்க்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கிரான்ட் வால், அமெரிக்கா- வேல்ஸ் (USA vs Wales) ஆட்டத்தைப் பார்க்கச் சென்றார், ஆனால், LGBTQ+ சின்னமான ரெயின்போ டி-சர்ட்டை அணிந்ததற்காக மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறினார். பாதுகாவலர்கள் தன்னை 25 நிமிடம் தடுத்து வைத்திருந்ததாகவும், அவரது டி-சர்ட்டை கழற்றுமாறும் கோரினர்.

"நீங்கள் உங்கள் டி-சர்ட்டை மாற்ற வேண்டும்" என்று ஒரு காவலர் என்னிடம் கூறினார். 'இது அனுமதிக்கப்படவில்லை'," என்று கிராண்ட் வால் ஒரு வலைப்பதிவில் சம்பவத்தை விவரிக்கிறார். கத்தாரில், ஓரினச்சேர்க்கை ஒரு கிரிமினல் குற்றம்; ஒரே பாலின திருமணங்களை கத்தார் அரசு அங்கீகரிக்கவில்லை. சட்டம் இருந்தபோதிலும், உலகக் கோப்பையின் போது ரசிகர்கள் வானவில் கொடியைக் காட்ட முடியும் என்று ஃபிஃபா அடிக்கடி வலியுறுத்துகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Sri Lanka China Pakistan World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment