scorecardresearch

காபூல் நகருக்குள் நுழைந்த தலிபான்கள்; ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார் அதிபர் அஷ்ரப் கனி!

ஆஃப்காணிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான்களால்சுற்றி வளைக்கப்பட்டதால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி விமானம் மூலம் அந்நாட்டில் இருந்து வெளியேறினார். அதே நேரத்தில், அரசுப் படைகள் சரணடைந்தால் உரிய பாதுகாப்பு தருவதாக தலிபான்கள் உறுதியளித்துள்ளார்.

Talibans enters kabul, Afghanistan, Ashraf ghani, kabul, Talibans, ஆஃப்கானிஸ்தான், காபூல், தாலிபான்கள், அஷ்ரப் கனி, Afghan president Ashraf Ghani leaves Afghanistan, Talibans won, Afghanistan news, Kabul news

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரை தலிபான்கள் சுற்றி வளைத்ததையடுத்து, அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி விமானம் மூலம் தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைதியான முறையில் அதிகாரத்தை கைமாற்றிக்கொள்ள தலிபான்கள் காத்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தலைநகர் காபூலில் இருந்து தஜிகிஸ்தானுக்கு சென்றார்.
ஆஃப்கானிஸ்தான் அதிபர் அலுவலகம், பாதுகாப்பு காரணங்களுக்காக அஷ்ரப் கானியின் நடமாட்டம் பற்றி எதுவும் கூற முடியாது என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலிபான்களின் கடுமையான தாக்குதலுக்கு மத்தியில், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை மேலும் சுருங்கியது. காபூலுக்கு மேற்கே தாலிபான் மாகாண தலைநகரான மைதான் வர்தக் கைப்பற்றப்பட்டது. முன்னதாக, இன்று ஆஃப்கானிஸ்தானின் முக்கிய கிழக்கு நகரமான ஜலாலாபாத் சண்டையே இல்லாமல் தலிபான் வசம் விழுந்தது. கடைசியாக கிளர்ச்சியாளர்கள் தலைநகர் காபூலைக் கைப்பற்ற நெருங்கினாக்ரள். ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுடன் இணைக்கும் சாலைகளையும் தலிபான்கள் கைப்பற்றியதாக என்று மேற்கத்திய அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆஃப்கானிஸ்தானில் குறைந்தது எட்டு வாரங்களுக்குள், மஜார்-இ-ஷெரீப், லோகர் மாகாணம், கந்தஹார், ஹெராத் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களையும் நாடு முழுவதும் கைப்பற்றினர். கடந்த 24 மணி நேரத்தில் நகரங்களை கைப்பற்றுவது கிட்டத்தட்ட எந்த எதிர்ப்புமின்றி நடந்தது. தலிபான் போராளிகள் சனிக்கிழமை மசார்-இ-ஷெரீஃப்பில் நுழைந்ததால், அரசு பாதுகாப்புப் படைகள் அண்டை நாடான உஸ்பெகிஸ்தானுக்கு தப்பிச் சென்றன.

உஸ்பெகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில், 84 ஆப்கானிஸ்தான் வீரர்கள் எல்லை தாண்டி வந்து உஸ்பெகிஸ்தானிடம் உதவி கேட்டனர். உஸ்பெக் காவலர்கள் ஆப்கானிஸ்தான் இராணுவக் குழுவை எல்லை தாண்டியபோது தடுத்து நிறுத்தினர். இந்த குழுவில் காயமடைந்த மூன்று ராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவி தேவை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு உஸ்பெகிஸ்தானில் உணவு மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தான் வீரர்களை தங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் அமைச்சகம் பேசி வருவதாக செய்தி வெளியானது.

ஆஃப்காணிஸ்தான் தலைநகர் காபூல் தலிபான்களால்சுற்றி வளைக்கப்பட்டதால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி விமானம் மூலம் அந்நாட்டில் இருந்து வெளியேறினார். ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி விமானம் மூலம் தஜிகிஸ்தானுக்கு சென்றதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில், அரசுப் படைகள் சரணடைந்தால் உரிய பாதுகாப்பு தருவதாக தலிபான்கள் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தலிபான்கள் காபூல் நகரத்தில் சில இங்களில் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த இந்தியர்கள் 129 பேர் இந்திய அரசின் முயற்சியில் தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார்கள்.

இதனிடையே, காபூல் நகருக்குள் நுழைய தலிபான் படைகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. காபூல் நகரத்தின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருக்கும் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதியளித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Afghanistan president ashraf ghani has left the country talibans enters kabul