Advertisment

கவிழ்ந்தது ராஜபக்சே ஆட்சி... நம்பிக்கை வாக்கெடுப்பில் படுதோல்வி...

அமளி மற்றும் குழப்பம் காரணமாக நாளை வரை இலங்கை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுவதாக கரு ஜெயசூர்யா அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இலங்கை நாடாளுமன்றம், ராஜபக்சே படுதோல்வி

இலங்கை நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது : இலங்கையில் அரசியல் ரீதியாக பெரும் குழப்பங்கள் தினமும் அரங்கேறி வருகின்றன. கடைசி மாதம் ரணில் விக்ரமசிங்கே ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவினை வாபஸ் வாங்கியது சிறிசேனாவின் கட்சி. பின்னர், புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே.

Advertisment

நீடித்து வரும் அரசியல் குழப்பம்

அதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பினை நடத்துவதற்காக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என ரணில் விக்ரமசிங்கே தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் நவம்பர் 16ம் தேதி வரை இலங்கை நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அறிவித்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேனா.

பின்னர் ராஜபக்சேவிற்கு சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தனர். பலர் சிறிசேனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்து வந்தனர். சபாநாயகர் கரு ஜெயசூர்யா சிறிசேனாவின் இந்த நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கும் சட்டத்திற்கும் புறம்பானது என்று கூறி, நாடாளுமன்றத்தை கூட்ட சிறிசேனாவினை வலியுறுத்தினார்.

ஆனால் இந்த இழுபறிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை கலைத்து அறிவிப்பினை வெளியிட்டார் சிறிசேனா. ஜனவரி 5ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பினை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் 12 மனுக்கள் பதியப்பட்டன.

மேலும் படிக்க : அதிபர் சிறிசேனாவின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்

இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணையின் இறுதியில் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா வெளியிட்ட உத்தரவிற்கு டிசம்பர் 7-ம் தேதிவரை தடை விதித்தது உச்ச நீதிமன்றம். தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டது. அதிபரின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது டிசம்பர் 4-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு விசாரணை நடத்தி, 7-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராஜபக்சே அரசு கவிழ்ந்தது

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார் நாடாளுமன்ற சபாநாயகர் கரு. ஜெயசூர்யா. நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு கோரிக்கை விடுத்தார் ரணில் விக்ரமசிங்கே. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார். அமளி மற்றும் குழப்பம் காரணமாக நாளை வரை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுவதாக கரு ஜெயசூர்யா அறிவித்திருக்கிறார்.

இலங்கை நாடாளுமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு, ராஜபக்சே வெளிநடப்பு இலங்கை நாடாளுமன்றம் : அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்

இந்த அமளி மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ராஜபக்சேவிற்கு எதிராக நிறைய எம்.பிக்கள் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து அவரின் அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் கரு. ஜெயசூர்யா அறிவித்தார்.

Sri Lanka Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment