Advertisment

உலகம் முழுவதும் கோவிட் தடுப்பூசிகளை திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா

இருப்பினும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான முடிவு நீதிமன்ற வழக்குடன் இணைக்கப்படவில்லை. இது முற்றிலும் தற்செயலானது என்று நிறுவனம் கூறியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AstraZeneca vaccine

இந்தியாவில், புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மூலம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது மற்றும் அதே தடுப்பூசியின் 175 கோடி டோஸ்கள் பல்வேறு கட்டங்களில் செலுத்தப்பட்டன. (AP)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக, அஸ்ட்ராஜெனகா நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன் கோவிட் தடுப்பூசி அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு இது வந்துள்ளது.

Advertisment

The Telegraph இன் அறிக்கையின்படி, வணிக காரணங்களுக்காக சந்தைகளில் இருந்து தடுப்பூசி அகற்றப்படுவதாக AstraZeneca கூறியது.

புதிய வகை கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ளும் வகையில் அப்டேட் செய்யப்பட்ட தடுப்பூசிகள் அதிகளவில் சந்தையில் உள்ளன. இதனால் VAXZERVIA தடுப்பூசி தயாரிக்கப்படவோ அல்லது வழங்கப்படவோ இல்லை.

நிறுவனம் தானாக முன்வந்து அதன் "சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை" திரும்பப் பெற்ற பிறகு, தடுப்பூசியை இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாது.  தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் இந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி TTS (Thrombosis with Thrombocytopenia Syndrome) உட்பட மரணம் மற்றும் கடுமையான காயங்களையும், இது மக்களுக்கு ரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை ஏற்படுத்தியதாகவும் கூறி மருந்து நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இருப்பினும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான முடிவு நீதிமன்ற வழக்குடன் இணைக்கப்படவில்லை. இது முற்றிலும் தற்செயலானது என்று நிறுவனம் கூறியது.

2020 இல் கொரோனா வைரஸ் பரவிய பிறகு, அஸ்ட்ராஜெனெகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து AZD1222 தடுப்பூசியை உருவாக்கியது.

இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், இது "கோவிஷீல்ட்" என்ற பெயரில், இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் (SII) மூலம் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடிஷ்-பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளரின் உரிமத்துடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

'அரிதான' பக்க விளைவுகள் பற்றிய அறிக்கை

அஸ்ட்ராஜெனெகா பிப்ரவரியில் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்ட ஆவணத்தில், அதன் கோவிட் தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், TTS ஐ ஏற்படுத்தும்" என்று ஒப்புக்கொண்டது.

தடுப்பூசி "குறைபாடுள்ளது" என்றும், அதன் செயல்திறன் மிகவும் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது என்றும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அஸ்ட்ராஜெனெகா இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தது.

இதுவரை 51 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துயரில் இருக்கும் உறவினர்கள் 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான நஷ்டஈடு கோரியுள்ளனர்.

சட்டப்பூர்வ உரிமைகோரல்களைக் கொண்டுவரும் சட்ட நிறுவனமான Leigh Dayயின் பங்குதாரரான சாரா மூர் கூறுகையில்,  ந்தச் சூழலில், வருந்தத்தக்க வகையில், AZ, அரசாங்கமும் அவர்களது வழக்கறிஞர்களும் அவர்களின் AZ தடுப்பூசி எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பேரழிவுத் தாக்கத்தில் தீவிரமாக ஈடுபடுவதை விட, மூலோபாய விளையாட்டுகளை விளையாடுவதற்கும் சட்டக் கட்டணங்களைச் செலுத்துவதற்கும் அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது, என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, அஸ்ட்ராஜெனெகாஅன்பானவர்களை இழந்த அல்லது உடல்நலப் பிரச்சினைகளைப் புகாரளிக்கும் எவருக்கும் எங்கள் அனுதாபம். நோயாளிகளின் பாதுகாப்பே எங்கள் மிக உயர்ந்த முன்னுரிமையாகும், மேலும் தடுப்பூசிகள் உட்பட அனைத்து மருந்துகளின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிசெய்ய ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு தெளிவான மற்றும் கடுமையான தரநிலைகள் உள்ளன”, என்றது.

Read in English: ‘Commercial reasons’: Astrazeneca withdraws Covid vaccine, weeks after report on rare side effects

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Covid 19 Vaccination
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment