Bangladesh seeks loan from IMF, Earthquake in Philippines world news today: இன்று உலக நாடுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
ஐ.எம்.எஃப்., இடம் கடன் கேட்கும் வங்க தேசம்
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க வாஷிங்டனை தளமாகக் கொண்ட பன்னாட்டு நிதியத்திடம் (IMF) 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை வங்க தேசம் முறையாக கோரியுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: குரங்கு அம்மை தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி… உலகச் செய்திகள் சில
அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு பங்களாதேஷ் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டதாக டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸ் தீவான லூசானில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, தலைநகர் மணிலா உட்பட பல பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/philippines-quake.jpg)
10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது காயம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை.
அப்ரா மாகாணத்தில் உள்ள டோலோரஸ் நகருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 11 கிமீ தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக யு.எஸ்.ஜி.எஸ் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் பெண்கள் மீது அடக்குமுறைகளை செலுத்தும் தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்பு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலிபான்கள் ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை "அழித்துள்ளனர்" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அறிக்கை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/62157597_303.jpg)
ஆட்சியின் கொடூரமான விதிகளின் கீழ் கடுமையாக குறைக்கப்பட்ட கல்வி, வேலை மற்றும் சுதந்திரமான இயக்கத்திற்கான உரிமைகள் இதில் அடங்கும்.
"ஒவ்வொரு தினசரி விவரமும், அதாவது அவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்களா, அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள், எப்படி வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு எதிரான இந்த ஒடுக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ”என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பொதுச்செயலாளர் ஆக்னெஸ் காலமார்ட் கூறினார்.
உலகளாவிய மந்தநிலை எச்சரிக்கை
அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரங்கள் நெருக்கடிகளின் மோதலுக்கு மத்தியில் எதிர்பார்த்ததை விட மிகக் கடுமையாக மந்தமாக இருப்பதால் உலகம் விரைவில் உலகளாவிய மந்தநிலையின் விளிம்பில் இருக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம் செவ்வாயன்று எச்சரித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/GLOBAL-ECON.jpg)
உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் புதுப்பிப்பில், உக்ரைனில் போர், பணவீக்கம் மற்றும் மீண்டும் எழுச்சியடைந்த தொற்றுநோய் ஆகியவை ஒவ்வொரு கண்டத்திலும் வலியை ஏற்படுத்தியதால், சமீபத்திய மாதங்களில் பொருளாதார வாய்ப்புகள் கணிசமாக இருளடைந்துள்ளதாக IMF கூறியது.
கோத்தபயவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவை மேலும் 14 நாட்களுக்கு தங்க சிங்கப்பூர் அனுமதித்துள்ளதாக, இந்த விவகாரத்தை நன்கு அறிந்த இரண்டு வட்டாரங்கள் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/rajapaksa-4-1.jpg)
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட பயணமாக வந்தபோது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது, இலங்கை மற்றும் சிங்கப்பூரில் உள்ள இரண்டு தனித்தனி ஆதாரங்கள், இந்த விஷயத்தை அறிந்ததாக ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. இதனால் ஆகஸ்ட் 11ம் தேதி வரை கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் தங்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil