New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/California-shooting.jpg)
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் மரணம் அடைந்த நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி (பிரதிநிதித்துவ படம்)
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் மரணம் அடைந்த நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் மரணம் அடைந்த நிலையில், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி (பிரதிநிதித்துவ படம்)
அமெரிக்காவின் கலிபோர்னியா ஆரஞ்சு கவுண்டியில் உள்ள பைக்கர்ஸ் பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி புதன்கிழமை சி.பி.எஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் மதுக்கடையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர், என்று ஆரஞ்சு கவுண்டி ஷெரிப் சமூக ஊடக தளமான X தளத்தில் தெரிவித்துள்ளார்.
#OCSDPIO Update- Incident scene at Cooks Corner is static. We are in unified command with @OCFA. Confirmed 4 deceased at scene, inc. the shooter. 6 transported to hospitals, 5 reported w/gunshot wounds. Officer-involved shooting occurred during the incident. No deputies injured.
— OC Sheriff, CA (@OCSheriff) August 24, 2023
ஷெரிப் அலுவலகம் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை மற்றும் கருத்துக்கான ராய்ட்டர்ஸின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. ட்ரபுகோ கேன்யனில் உள்ள குக்ஸ் கார்னர் என்ற பைக்கர்ஸ் பாரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், தற்போது பெரிய அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் சி.பி.எஸ் அறிக்கை கூறியுள்ளது.
காவல்துறை அதிகாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுடப்பட்டார், ஆனால் அந்த நபரின் நிலை தெரியவில்லை என்று ஆதாரங்களில் இருந்து KCAL செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.