/tamil-ie/media/media_files/uploads/2018/03/1520311998_representational-image.jpg)
சீனாவில் விளையாட்டுக்காக சமூக வலைத்தளம் மூலம் இலவசமாக பாலியல் உறவு கொள்ள அழைப்பு விடுத்த 19 வயது பெண்ணை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
சீனாவை சேர்ந்த யே மூயி (Ye Mouyi), 19 என்ற இளம்பெண், தன்னுடன் இலவசமாக பாலியல் உறவுகொள்ள விரும்புபவர்கள் குறிப்பிட்ட ஹோட்டலுக்கு வருகை தருமாறு, தொடர்பு எண் மற்றும் முகவரி, ஹோட்டல் அறை எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, சமூக வலைத்தளமொன்றில் வீடியோவாக வெளியிட்டார்.
இந்நிலையில், இந்த வீடியோ, பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் வீபோ, வீசாட் ஆகிய சீன சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால், அந்த வீடியோவை உண்மை என நம்பி, பலரும் அந்த ஹோட்டலை தொடர்புகொண்டு, அப்பெண் குறிப்பிட்ட அறையில் யார் இருக்கிறார் என விசாரித்திருக்கின்றனர். மேலும், பலர் நேரடியாகவே ஹோட்டலுக்கு வருகை தந்துள்ளனர். இப்படியாக சுமார் 3,000 பேர் போனில் தொடர்புகொண்டும், நேரடியாகவும் வந்து அப்பெண் குறித்து விசாரித்துள்ளனர்.
இதனால், அப்பெண் வீசாட்டில் தோன்றி, தான் ‘ஜோக்குக்காக’ அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். இதையறிந்த ஹோட்டல் நிர்வாகம், அப்பெண் குறித்து போலீசில் புகார் செய்தனர்.
ஆனால், போலீசார் அங்கு வருவதற்குள்ளாகவே அப்பெண் தப்பித்துவிட்டார். இதையடுத்து, அவரை போலீசார் வேறொரு இடத்தில் வைத்து கைது செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.