Advertisment

வீட்டிலியே ’பாம்பு ஒயின்’தயாரிக்க முயன்ற இளம்பெண் மரணம்!

ஆன்லைனில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீட்டிலியே ’பாம்பு ஒயின்’தயாரிக்க முயன்ற இளம்பெண் மரணம்!

சீனாவில் இளம் பெண் ஒருவர் ’பாம்பு ஒயின்’ தயாரிக்க ஆன்லைனில் கொடிய விஷயமுள்ள பாம்பு ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் இறுதியில் அந்த பாம்பு கடித்து கொடூரமாக உயிரிழந்தார்.

Advertisment

பாம்பு ஒயின் உலகிலேயே மிகவும் சிறந்த பானமாக கருதப்படுகிறது. இது நச்சுத்தன்மையுடைய நாகப்பாம்பை மூன்று மாதமாக நீரில் போட்டு பதப்படுத்தி வைத்து, பின் அதனை குடிப்பார்கள். இதனைக் குடித்தால், வாதநோய் குணமாவதோடு, பாலியல் ஆர்வம் அதிகரிக்குமாம். குறிப்பாக இந்த வைன் சீனாவில் அதிகம் கிடைக்கும்.

இதைப்பற்றி தெரிந்தக் கொண்ட சீன பெண் ஒருவர் வீட்டிலியே பாம்பு ஒயின் தயாரிக்க முடிவு எடுத்துள்ளார். இதன்படி ஆன்லைனில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த பாம்பு அவரின் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்பட்ரது.

publive-image

இந்நிலையில், பாம்பு ஒயின் பாரம்பரியாமாக தயாரிப்பது பற்றி இரவு முழுவதும் ஆன்லைனில் குறிப்பும் எடுத்துள்ளார். அப்போது தான் இந்த துர்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பார்சலில் இருந்து அந்த பெண் பாம்பை எடுக்கும் போது அந்த விஷம் மிகுந்த நாகம் அந்த பெண்ணை கடித்துள்ளது. இதனால் அவர் அடுத்த நிமிடமே உடல் முழுவதும் நீளமாக மாறி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

China Wine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment