scorecardresearch

இந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”

கொரோனா நோய்க்கு சிங்கப்பூர் நாட்டில் இன்று வரை 5 பேர் பலியாகி உள்ளனர். 

Coronavirus outbreak Singapore announces 1-month lockdown
Coronavirus outbreak Singapore announces 1-month lockdown

Coronavirus outbreak Singapore announces 1-month lockdown :  சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நோய் பரவலை தடுப்பதற்காக வரும் 7ந்தேதி முதல் அடுத்த 1 மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இந்த உத்தரவை தற்போது அறிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங்.

மேலும் படிக்க : அமீரகம் போல் செயல்பட வேண்டும்… ஊரடங்கை மீறினால் தண்டனை என்ன தெரியுமா?

அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகள் மட்டும் மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து இயங்கி வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள், பெருமளவிலான பணியிடங்கள் 7ம் தேதி முதல் மூடப்படுகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்க்கு சிங்கப்பூர் நாட்டில் இன்று வரை 5 பேர் பலியாகி உள்ளனர்.  1,049 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் நாடு என்பதால் நோய் தொற்று அதிக அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி தனிநபர் இடைவெளியை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சமூக இடைவெளி விதிகளை மீறுவோர்கள் மீது 6 மாத சிறை தண்டனையும், 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராத தொகையும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு

பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்று அந்த நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அறிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Coronavirus outbreak singapore announces 1 month lockdown

Best of Express