Advertisment

சீனாவில் 133 பேருடன் சென்ற போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்து

விமான விழுந்த பகுதிக்கு மீட்புக்குழு விரைந்துள்ளதாகவும்,விபத்தில் உயிரிழந்தோர் விவரம் குறித்து உடனடித் தகவல் வெளியாகவில்லை.

author-image
WebDesk
New Update
சீனாவில் 133 பேருடன் சென்ற போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்து

சீனாவில் 133 பேருடன் சென்ற போயிங் விமானம், தெற்கு மாகாணமான குவாங்சியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisment

பிராட்காஸ்டர் சிசிடிவி தகவலின்படி, சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் போயிங் 737 ரக விமானம், டெங் கவுண்டியில் உள்ள வுஜோ நகருக்கு அருகே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்தால், மலைப்பகுதியில் தீ ஏற்பட்டது.

விமானத்தில் இருந்த 133 பேரில் 123 பயணிகள் என சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

FlightRadar24.com தகவலின்படி, சீனா ஈஸ்டர்ன் விமானம் எண். 5735, சுமார் 30,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் பறக்க தொடங்கிய, ஒன்றரை நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை எஞ்சின், ஒற்றை நடுவழி கொண்ட போயிங் 737 சிறிய மற்றும் மிடியம் தூர பயணங்களுக்கு, உலகின் மிகவும் பிரபலமான விமானங்களில் ஒன்றாக உள்ளது.

இருப்பினும், 737 இன் எந்த வகை விமானம் விபத்துக்குள்ளானது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. சீனா ஈஸ்டர்ன், 737-800 மற்றும் 737 மேக்ஸ் உட்பட பொதுவான விமானங்களின் பல பதிப்புகளை இயக்குகிறது.

737 மேக்ஸ் பதிப்பு இரண்டு அபாயகரமான விபத்துகளுக்குப் பிறகு, உலகம் முழுவதும் பயணிக்க தொடங்கியது. சீனாவின் ஏவியேஷன் ரெகுலேட்டர் கடந்தாண்டின் பிற்பகுதியில் அந்த விமானத்தை சேவைக்குத் திரும்ப அனுமதித்தது. சீனாவின் மூன்று முக்கிய விமான கேரியர்களில் சீனா ஈஸ்டர்ன் ஒன்றாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

China Airlines
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment