/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-105.jpg)
முதலையின் வாயில் சாகசம் செய்ய முயன்ற நபரின் கையை முதலை கொடூரமாக கடித்து குதறும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தாய்லாந்தில் உள்ள சியாங் ராய் மாநிலத்தில் போக்கதாரா முதலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு அரிய வகை பண்ணைகள் அதிகளவில் காணப்படுவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் நேற்றைய தினம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாகச நிகழ்ச்சி ஒன்று ஏற்படு செய்யப்பட்டிருந்தது. 35 வயதாகும் குன் புஷாவத் என்ற நபர் இந்த சாகச நிகழ்ச்சியில் முதலையின் வாயில் கைவிட்டு எடுப்பதாக அறிவித்தார். குன் புஷாவத் பண்ணையில் இருக்கும் முதலைகளுக்குப் பயிற்சி அளிப்பது, உணவு அளிப்பது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகிறார்.
திட்டமிட்டப்படி நேற்று மாலை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. புஷாவத்திற்கு துணையாக அவரது மனைவி நோக், அவரின் இரு பிள்ளைகளும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். முதலில் முதலையின் வாய்க்குள் கையை விட்டு எடுக்கும் நிகழ்ச்சியை புஷாவத் செய்தார். அனைத்துப் பார்வையாளர்களும் இதை ஆர்வத்துடன், கைதட்டி ரசித்தனர்.
அப்போது ஒரு முதலையின் வாய்க்குள் குன் புஷாவத் கையை விட்டு பார்வையாளர்களை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அந்த முதலை புஷாவத்தின் கையை கடித்துக் குதறியது. அந்த முதலியின் பிடியில் இருந்து புஷாவத் தனது கைகளை எடுக்க முயன்றும் சில வினாடிகளில் அவரின் கைகள் முதலையால் குதறப்பட்டனர்.
இதைப் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து, சத்தமிட்டனர். கைகளில் ரத்தம் சொட்ட சொட்ட புஷாவத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.