/tamil-ie/media/media_files/uploads/2023/02/Monsoon-1.jpg)
இந்திய பெருங்கடலில் உருவான ஆக்ரோஷ சூறாவளி புயல் வேகமாக நகரும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகி இருக்கிறது.
புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச விண்வெளி மையம் வீடியோ எடுத்திருக்கிறது. இந்த புயலானது இந்திய பெருங்கடல் தீவான மௌரிஷியஸை நோக்கி செல்கிறது.
இந்த புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) மௌரிஷியஸை தாக்கும் என்றும், சூறாவளியால் மணிக்கு 120 மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், அந்த தீவு நேரடி அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த சூறாவளி புயல் ஒரு பயங்கர பாதிப்பை ஏற்படுத்தும், இதனால் பாதிக்கப்படும் இடத்தில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.