இந்தியா மக்களின் முக்கிய தினமாகக் கருதப்படும் தீபாவளி பண்டிகை துபாய் மாநகரங்களில் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. அந்த கொண்டாட்டத்தை தொடங்கும் விதமாக , துபாய் மாநகர போலீசார் இசைக் குழுவால் வாசிக்கப்பட்ட ஜன கண மன தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
துபாய் சுற்றுலா துறை, துபாயில் இருக்கும் இந்திய துணைத் தூதரகம் இனைந்து இந்த கொண்டாட்டத்தை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பட்டாசுகளாலும், லேசர் வண்ண விளக்குகளாலும் துபாய் நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.
இந்த நிகழ்சிக்காக, சிறப்பு நடனக் காட்சிகளும் அரங்கேறின