ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குறித்து அவதூறான கருத்துகள் கூறுவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் கைவிட வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
டிரம்ப்பின் கருத்துகளுக்கு, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். டிரம்ப் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தத்தை விரும்பினால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மீதான மரியாதையற்ற போக்கை கைவிட வேண்டும் என்றும், அவருடைய லட்சக்கணக்கான ஆதரவாளர்களை புண்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், "ஈரானியர்களின் தன்மையும், விடாமுயற்சியும் அனைவரும் அறிந்த ஒன்று. அவை கடின உழைப்பு மற்றும் பொறுமையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆனால் மக்களாக, எங்கள் அடிப்படை நோக்கம் மிகவும் எளிமையானது: நாங்கள் எங்கள் மதிப்பை அறிவோம், எங்கள் சுதந்திரத்தை மதிக்கிறோம், எங்கள் தலைவிதியை வேறு யாரும் தீர்மானிக்க அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
மேலும், "இது போன்ற கருத்துகள் மோசமான தவறுகளுக்கு வழிவகுத்தால், ஈரான் தனது உண்மையான பலத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்காது. இது ஈரானின் சக்தி பற்றிய எந்த ஒரு கற்பனையையும் நிச்சயமாக முடிவுக்கு கொண்டு வரும்" என்றும் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
வெள்ளிக்கிழமை, டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய போதும், பின்னர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையிலும், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு கமேனியின் கருத்துகள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை என்று கூறியிருந்தார். கமேனியின் கருத்துகள் ஈரானின் மிக சக்திவாய்ந்த அரசியல் மற்றும் மதத் தலைவருக்கு பொருத்தமற்றவை என்றும் டிரம்ப் கூறினார்.
"நீங்கள் ஒரு சிறந்த விசுவாசமான மனிதர். உங்கள் நாட்டில் மிகவும் மதிக்கப்படும் ஒரு மனிதர். நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும்," என்று டிரம்ப் கூறினார்.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தை தாக்கியதன் மூலம் தெஹ்ரான் "அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்தது" என்று கமேனி கூறியதை தொடர்ந்து, டிரம்பின் இந்த கருத்துகள் வெளியாகின.
இருப்பினும், கமேனியின் அனைத்து அறிக்கைகளையும் மறுத்த டிரம்ப், "அவரது நாடு அழிக்கப்பட்டது. அவரது மூன்று அணுசக்தி தளங்கள் தகர்க்கப்பட்டன. அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது எனக்கு தெரியும். இஸ்ரேலையோ அல்லது உலகின் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த அமெரிக்க ஆயுத படைகளையோ முடிவுக்கு கொண்டுவர நான் அனுமதிக்கவில்லை" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். "நான் அவரை ஒரு மிக மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றினேன். அவர் 'நன்றி, அதிபர் டிரம்ப்!' என்று சொல்ல வேண்டியதில்லை" என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
ஒப்பந்தம் வேண்டுமானால், அவமரியாதையாக பேசும் தொனியை ஒதுக்கி வையுங்க: டிரம்ப்புக்கு ஈரான் எச்சரிக்கை
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தை தாக்கியதன் மூலம் தெஹ்ரான் "அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்தது" என்று கமேனி கூறியதை தொடர்ந்து, டிரம்பின் இந்த கருத்துகள் வெளியாகின.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தை தாக்கியதன் மூலம் தெஹ்ரான் "அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்தது" என்று கமேனி கூறியதை தொடர்ந்து, டிரம்பின் இந்த கருத்துகள் வெளியாகின.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குறித்து அவதூறான கருத்துகள் கூறுவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் கைவிட வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
டிரம்ப்பின் கருத்துகளுக்கு, ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். டிரம்ப் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தத்தை விரும்பினால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மீதான மரியாதையற்ற போக்கை கைவிட வேண்டும் என்றும், அவருடைய லட்சக்கணக்கான ஆதரவாளர்களை புண்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், "ஈரானியர்களின் தன்மையும், விடாமுயற்சியும் அனைவரும் அறிந்த ஒன்று. அவை கடின உழைப்பு மற்றும் பொறுமையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆனால் மக்களாக, எங்கள் அடிப்படை நோக்கம் மிகவும் எளிமையானது: நாங்கள் எங்கள் மதிப்பை அறிவோம், எங்கள் சுதந்திரத்தை மதிக்கிறோம், எங்கள் தலைவிதியை வேறு யாரும் தீர்மானிக்க அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
மேலும், "இது போன்ற கருத்துகள் மோசமான தவறுகளுக்கு வழிவகுத்தால், ஈரான் தனது உண்மையான பலத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்காது. இது ஈரானின் சக்தி பற்றிய எந்த ஒரு கற்பனையையும் நிச்சயமாக முடிவுக்கு கொண்டு வரும்" என்றும் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
வெள்ளிக்கிழமை, டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய போதும், பின்னர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையிலும், இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு கமேனியின் கருத்துகள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவை என்று கூறியிருந்தார். கமேனியின் கருத்துகள் ஈரானின் மிக சக்திவாய்ந்த அரசியல் மற்றும் மதத் தலைவருக்கு பொருத்தமற்றவை என்றும் டிரம்ப் கூறினார்.
"நீங்கள் ஒரு சிறந்த விசுவாசமான மனிதர். உங்கள் நாட்டில் மிகவும் மதிக்கப்படும் ஒரு மனிதர். நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும்," என்று டிரம்ப் கூறினார்.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு கத்தாரில் உள்ள அமெரிக்க விமான தளத்தை தாக்கியதன் மூலம் தெஹ்ரான் "அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்தது" என்று கமேனி கூறியதை தொடர்ந்து, டிரம்பின் இந்த கருத்துகள் வெளியாகின.
இருப்பினும், கமேனியின் அனைத்து அறிக்கைகளையும் மறுத்த டிரம்ப், "அவரது நாடு அழிக்கப்பட்டது. அவரது மூன்று அணுசக்தி தளங்கள் தகர்க்கப்பட்டன. அவர் எங்கு தங்கியிருந்தார் என்பது எனக்கு தெரியும். இஸ்ரேலையோ அல்லது உலகின் மிகச்சிறந்த மற்றும் சக்திவாய்ந்த அமெரிக்க ஆயுத படைகளையோ முடிவுக்கு கொண்டுவர நான் அனுமதிக்கவில்லை" என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். "நான் அவரை ஒரு மிக மோசமான மரணத்திலிருந்து காப்பாற்றினேன். அவர் 'நன்றி, அதிபர் டிரம்ப்!' என்று சொல்ல வேண்டியதில்லை" என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.