Advertisment

ஈரானில் ஹமாஸ் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ismail Haniyeh

ஹமாஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் படுகொலை செய்யப்பட்டார் என்று பாலஸ்தீனிய போராளிக் குழு ஹமாஸ் புதன்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல் அவரை படுகொலை செய்ததாக ஹமாஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. 

Advertisment

ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹனியேவின் மரணத்தை ஈரானின் புரட்சிகரக் காவலர்கள் உறுதிசெய்து, விசாரணை நடத்தி வருவதாகக் கூறினர்.  எனினும் இஸ்ரேல் இதுகுறித்து எதுவும் கூறவில்லை. 

"சகோதரர் ஹனியேவின் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் மேற்கொள்ளப்பட்ட இந்த படுகொலையானது ஹமாஸின் விருப்பத்தை உடைக்கும் நோக்கத்தை கொண்ட ஒரு தீவிரமான செயலாகும்" என்று ஹமாஸின் மூத்த அதிகாரி சமி அபு ஸுஹ்ரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

ஹமாஸ் தான் பின்பற்றும் பாதையை தொடரும் என்று கூறிய அவர், "வெற்றியில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்றும் கூறினார்.

1,200 பேரைக் கொன்று 250 பேரை பிணைக் கைதிகளாகக் கைப்பற்றிய இஸ்ரேல் மீதான குழுவின் அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹனியே மற்றும் ஹமாஸின் பிற தலைவர்களைக் கொல்வதாக இஸ்ரேல் சபதம் செய்தது.

ஏப்ரலில், காசாவில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஹனியாவின் மூன்று மகன்கள் மற்றும் நான்கு பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

உலகம் இதற்கு எவ்வாறு ரியாக்ட் செய்தது?

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஹனியேவின் கொலையை கண்டித்து, இது "கோழைத்தனமான செயல் மற்றும் ஆபத்தான வளர்ச்சி" என்று கூறினார். மேற்குக் கரையில் உள்ள அரசியல் பிரிவுகள் இந்தக் கொலையைக் கண்டித்து வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்தன. 

ஆங்கிலத்தில் படிக்க:  Hamas accuses Israel of ‘assassinating’ its top leader Ismail Haniyeh

ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் "இரத்தம் ஒருபோதும் வீணாகாது" என்று கூறினார். "தெஹ்ரானில் ஹனியேவின் தியாகம் தெஹ்ரான், பாலஸ்தீனம் மற்றும் எதிர்ப்பிற்கு இடையே உள்ள ஆழமான மற்றும் உடைக்க முடியாத பிணைப்பை வலுப்படுத்தும்" என்று கனானி ஈரானிய அரசு ஊடகத்தால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இந்த செய்திக்கு பதிலளித்த ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் கூறுகையில், "இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் கொலையாகும், மேலும் இது பதட்டங்களை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்" என்று துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டானோவ் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment