/tamil-ie/media/media_files/uploads/2023/02/Pakistan_PM_1200.jpg)
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டவர்களைக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தவும் சிவில் மற்றும் இராணுவத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு அந்நாட்டின் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், “நமது பொருளாதார நிலை கற்பனை செய்ய முடியாதது. அது, உங்களுக்கு தெரியும்.
சர்வதேச நாணய நிதியம் பணி பாகிஸ்தானில் உள்ளது, அது எங்களுக்கு கடினமான நேரத்தை அளிக்கிறது.
எங்களிடம் வளங்கள் குறைவாக இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தற்போது கற்பனைக்கு எட்டாத பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் மத்திய வங்கி கையிருப்பு தற்போது $3.09 பில்லியனாக உள்ளது, இது 1998 க்குப் பிறகு மிகக் குறைவு மற்றும் மூன்று வார இறக்குமதி செலவை ஈடுகட்ட போதுமானதாக இல்லை.
நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகள் பாகிஸ்தானின் நாணயத்தை சந்தை அடிப்படையிலான மாற்று விகிதங்களுக்கு விட்டுவிட்டு எரிபொருள் விலையை உயர்த்த வழிவகுத்தது.
இஸ்லாமாபாத் $6.5 பில்லியன் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் உள்ளது.
2.5 பில்லியன் டாலர்கள் இன்னும் வழங்கப்படாமல் நவம்பரில் இருந்து நிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க சர்வதேச நாணய நிதிக்குழு (IMF) பிரதிநிதிகள் குழு ஒன்று பாகிஸ்தானில் உள்ளது.
இக்கட்டான பொருளாதார சூழ்நிலை இருந்தபோதிலும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தனது நாடு முடிந்த அனைத்தையும் செய்யும்.
இந்த அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் அனைத்து வளங்களையும் பயன்படுத்துவோம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.