சீனாவில் சுற்றுலா பயணி ஒருவர், கடலில் இருக்கும் டால்பினை உயிரோடு பிடித்து முதுகில் சுமந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தற்சமயம் சீனாவில் நிலவி வரும் காலநிலை சுற்றுலா பயணிகளை பெருமளவில் கவர்ந்து வருகின்றன. உலகில் பலமூலைகளில் இருக்கும் சுற்றுலா வாசிகள் பலரும் சீனாவை நோக்கி படையெடுத்து வருகின்றன. அந்த வகையில், இரண்டு தினங்களுக்கு முன்பு சுற்றுலா பயணி ஒருவர், சீனாவில் இருக்கும் பிரதான கடற்கரையை ஒன்றிற்கு பொழுதை கழிக்க சென்றுள்ளார்.
அதன் பின்பு, அங்கிருந்த டால்பின் ஒன்றையும் சட்ட விரோதமாக பிடித்துள்ளார். டால்பினை பிடித்து அவர், தனது முதுகில் போட்டுக் கொண்டு செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை அவருக்கு பின்னால் சென்ற ஒரு நபர் அதை தனது செல்ஃபோனில் படம் பிடித்து உள்ளார்.
இந்த வீடியோ அங்குள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளது. மேலும், அந்த நபர் டால்பினை தூக்கிச் செல்லும் போது அது உயிரோடு இருந்ததாகவும் நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். இதுக் குறித்து ஆய்வு நடத்தியுள்ள சீனா காவல் துறையினர் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:In a horrific incident man was filmed walking with dolphin on his back
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை